நல்லூர் ஸ்ரீ சுந்தரவரதராஜப் பெருமாள் திருக்கல்யாண வைபவம்

நல்லூர் ஸ்ரீ சுந்தரவரதராஜப் பெருமாள் திருக்கல்யாண வைபவம்



திருவண்ணாமலை மாவட்டம், வந்தவாசி அடுத்த நல்லூர் ஸ்ரீ சுந்தரவரதராஜப் பெருமாள் கோவிலில் திருக்கல்யாண வைபவம் மற்றும் தன்வந்திரி பகவானுக்கு ஹோம பூஜைகள் வெகு விமரிசையாக நடைபெற்றது. இந்த வைபவத்தில் மூல மூர்த்திகளுக்கு பால், தயிர் சந்தனம், இளநீர் உள்ளிட்ட வாசனை திரவியங்கள் கொண்டு விசேஷ திருமஞ்சனம் நடந்தேறியது. பிறகு உற்சவ மூர்த்திகள் சிறப்பு அலங்காரத்தில் பக்தர்களுக்கு அருள் பாலித்தனர். யாகசாலை பூஜைகள் நிறைவடைந்து, வேத மந்திரங்கள் முழங்க திருக்கல்யாண வைபவம் சிறப்பாக நடைபெற்றது. உற்சவ மூர்த்திகள் மேளதாளத்துடன் கோவில் பிரகாரத்தில் வீதியுலா வந்தனர். இந்த வைபவத்தில் சுற்றியுள்ள பகுதிகளில் இருந்து திரளான பக்தர்கள் கலந்து கொண்டு தரிசனம் செய்தனர். பங்கேற்ற அனைவருக்கும் அர்ச்சகர் ராஜன் ஸ்வாமிகள் மேற்பார்வையில் தீர்த்த பிரசாதங்கள் வழங்கப்பட்டது.


பா. சீனிவாசன், வந்தவாசி.

Related News

Follow US

TODAY'S POLL

vote-image

தேசிய ஓய்வூதிய முறையின் கீழ் கிடைக்கும் 'வரி சலுகைகள்' ஒருங்கிணைந்த ஓய்வூதிய திட்டத்திற்கும் பொருந்தும். இது ஒருங்கிணைந்த ஓய்வூதியத் திட்டத்தைத் தேர்வுசெய்ய ஊழியர்களை ஊக்குவிக்குமா?

50%
50%