news Breaking News
clock

நெட் தேர்வு தொடக்கம், தேசிய தேர்வுகள் முகமை தகவல்

நெட் தேர்வு தொடக்கம், தேசிய தேர்வுகள் முகமை தகவல்



புதுடெல்லி,


ஓராண்டில் ஜூன், டிசம்பர் என இருமுறை கணினி வழியில் நெட் தேர்வு நடைபெறும். இந்த தேர்வை, தேசிய தேர்வுகள் முகமை (என்டிஏ) நடத்துகிறது.


அதன்படி 2025-ம் ஆண்டின் முதல் பருவத்துக்கான தேர்வு, கடந்த ஜூன் 25-ந்தேதி முதல் ஜூன் 29-ந்தேதி வரை நடைபெற்றது. தேர்வு முடிவுகள் ஜூலை 22 அன்று வெளியிடப்பட்டன.


இதனை தொடர்ந்து, நடப்பாண்டு 2-ம் கட்ட டிசம்பர் பருவத்துக்குரிய நெட் தேர்வுக்கான அறிவிப்பாணை சமீபத்தில் வெளியிடப்பட்டது. இந்நிலையில் நெட் தேர்வுக்கான கால அட்டவணையை என்டிஏ தற்போது வெளியிட்டுள்ளது.


அதன்படி 83 பாடங்களுக்கான நெட் தேர்வுகள் டிசம்பர் 31-ந்தேதி முதல் ஜனவரி 7-ந்தேதி வரை பல்வேறு கட்டங்களாக நடத்தப்பட உள்ளன.


இதுசார்ந்த கூடுதல் தகவல்களை ugcnet.nta.nic.in/www.nta.ac.in என்ற இணையதளத்தில் அறியலாம். ஏதேனும் சந்தேகம் இருப்பின் 011-69227700/40759000 ஆகிய எண்களில் தொடர்பு கொண்டு விளக்கம் பெறலாம் என்று என்டிஏ வெளியிட்ட செய்திக்குறிப்பில் கூறப்பட்டுள்ளது.


Related News

Follow US

TODAY'S POLL

vote-image

தேசிய ஓய்வூதிய முறையின் கீழ் கிடைக்கும் 'வரி சலுகைகள்' ஒருங்கிணைந்த ஓய்வூதிய திட்டத்திற்கும் பொருந்தும். இது ஒருங்கிணைந்த ஓய்வூதியத் திட்டத்தைத் தேர்வுசெய்ய ஊழியர்களை ஊக்குவிக்குமா?

50%
50%

Recent News