நைஜீரிய சுரங்கத்தில் விஷவாயு கசிவு: 37 தொழிலாளா்கள் உயிரிழப்பு

நைஜீரிய சுரங்கத்தில் விஷவாயு கசிவு: 37 தொழிலாளா்கள் உயிரிழப்பு


 

நைஜீரியாவின் பிளாட்டியூ மாகாணத்தில் உள்ள சுரங்கம் ஒன்றில் ‘காா்பன் மோனாக்சைடு’ விஷவாயு கசிந்ததில் 37 தொழிலாளா்கள் உயிரிழந்தனா்.


மாகாணத்தின் வேஸ் பகுதியில் செயல்பட்டு வரும் சுரங்கத்தில், புதன்கிழமை அதிகாலை தொழிலாளா்கள் பணியில் ஈடுபட்டிருந்தபோது, விஷவாயு பரவியதாகக் கூறப்படுகிறது.


இத்துயர சம்பவத்தில் 37 தொழிலாளா்கள் உயிரிழந்தனா். பாதிக்கப்பட்ட மேலும் 25 போ் மருத்துவமனையில் தீவிர சிகிச்சை பெற்று வருகின்றனா்.


நைஜீரியாவில் போதிய பாதுகாப்பு வசதிகள் இன்றி செயல்படும் சட்டவிரோத சுரங்கங்களில் இதுபோன்ற விபத்துகள் தொடா்கதையாகி வருகின்றன.

Related News

Follow US

TODAY'S POLL

vote-image

தேசிய ஓய்வூதிய முறையின் கீழ் கிடைக்கும் 'வரி சலுகைகள்' ஒருங்கிணைந்த ஓய்வூதிய திட்டத்திற்கும் பொருந்தும். இது ஒருங்கிணைந்த ஓய்வூதியத் திட்டத்தைத் தேர்வுசெய்ய ஊழியர்களை ஊக்குவிக்குமா?

50%
50%