செய்திகள்
            நேஷனல்-National
        
பஞ்சாப் முதலமைச்சர் நலமாக உள்ளார் போர்டிஸ் மருத்துவமனை தகவல்
- Sep 10 2025 
- 79 
 
    
ஆம் ஆத்மி கட்சி ஆளும் பஞ்சாப் மாநில முதலமைச்சராக இருப்பவர் பகவந்த் மான். இவர் வெள்ளிக் கிழமை அன்று உடல் சோர்வு மற்றும் சீரற்ற இதயத்துடிப்பு காரணமாக பஞ்சாப் மாநிலத்தின் முக்கிய நகரான மொகா லியில் உள்ள போர் டிஸ் மருத்துவமனை யில் அனுமதிக்கப்பட்டார். அங்கு அவருக்கு தொடர் சிகிச்சை அளிக்கப் பட்டு வருகிறது. இந்நிலையில், முதலமைச்சர் பகவந்த் மான் நலமாக உள்ளதாக ஞாயிறன்று போர்டிஸ் மருத்துவமனை நிர்வாகம் அறிக்கை வெளியிட்டுள்ளது. அதில்,“முதலமைச்சர் பகவந்த் மானின் உடல் இயக்கங்கள் இயல்பாக உள்ளன. வழக்கம் போல அவராக எழுந்து நடக்கத் தொடங்கியுள்ளார்” என அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.
Related News
Popular News
TODAY'S POLL
 
            தேசிய ஓய்வூதிய முறையின் கீழ் கிடைக்கும் 'வரி சலுகைகள்' ஒருங்கிணைந்த ஓய்வூதிய திட்டத்திற்கும் பொருந்தும். இது ஒருங்கிணைந்த ஓய்வூதியத் திட்டத்தைத் தேர்வுசெய்ய ஊழியர்களை ஊக்குவிக்குமா?
                                50%
                            
                            
                        
                                50%
                            
                            
                         
                     
                                 
                                                             
                                                             
                                                             
                             
                             
                             
                             
                             
                             
                     
                     
                  
                  
                  
                  
                  
                 