சென்னை: தமிழ்நாட்டில் ஒரு கோடிக்கும் அதிகமான குடும்ப அட்டைதாரர்கள் மாதம்தோறும் ரேசன் கடைகளில் சர்க்கரை, துவரம் பருப்பு, சமையல் எண்ணெய் (பாமா யில்) ஆகியவற்றை மிக குறைந்த விலையில் பெற்று வரு கின்றனர். ஏழை - எளியவர்களின் நலனை கருத்தில் கொண்டு தமிழ்நாடு அரசு துவரம் பருப்பு, பாமாயில் ஆகிய வற்றை மிக குறைந்த மானிய விலையில் வழங்கி வருகிறது. தமிழ்நாட்டில் சிறப்பு பொது விநியோகத் திட்டத்திற்குத் தேவையான பருப்பு மற்றும் பாமாயில், தமிழ்நாடு ஒப்பந்தப் புள்ளி சட்டம் 1998 மற்றும் விதிகள் 2000-இன்படி நாளி தழ்களில் விளம்பரம் செய்யப்பட்டு உரிய நடைமுறைகளைப் பின்பற்றி கொள்முதல் செய்யப்படுகின்றன. சட்டமன்ற தேர்தல் காரணமாக முன்கூட்டியே ஏப்ரல், மே, ஜூன் மாதங்களுக்கான 6 கோடி பாமாயில் பாக்கெட்கள், 60 ஆயிரம் டன் துவரம் பருப்பு, 60 ஆயிரம் மெட்ரிக் டன் சர்க்கரை கொள்முதலுக்கான ஒப்பந்தத்தை தமிழ்நாடு அரசு கோரி யுள்ளது. பொது விநியோகத் திட்டத்தில் பருப்பு மற்றும் பாமா யிலை எந்தவித தங்கு தடையுமின்றி விநியோகம் செய்யும் வகையில் இந்நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக அதி காரிகள் விளக்கம் அளித்துள்ளனர்.
Related News
TODAY'S POLL
தேசிய ஓய்வூதிய முறையின் கீழ் கிடைக்கும் 'வரி சலுகைகள்' ஒருங்கிணைந்த ஓய்வூதிய திட்டத்திற்கும் பொருந்தும். இது ஒருங்கிணைந்த ஓய்வூதியத் திட்டத்தைத் தேர்வுசெய்ய ஊழியர்களை ஊக்குவிக்குமா?