பிரியாத வரம் வேண்டும்

பிரியாத வரம் வேண்டும்



பிரியத்தை கேட்டால் 

பிரிவை மட்டுமே தருகிறாயே ?

உனக்கொன்று தெரியுமா ?

இப்பிரபஞ்சத்தில்

உயிரற்று கிடக்கும் 

ஒரு சிறு துரும்பு கூட 

உன் நினைவுகளை 

தூசி தட்டி விட்டு தான் செல்கிறது .

என் கற்பனைகள் 

கஞ்சத்தனமின்றி 

கட்டுக்கடங்காமல் 

உன்னை சுற்றியே வலம் வருகின்றது.

காதல் வாழ்க்கையின் 

ஒரு பக்கமாம் 

யார் சொன்னது ?

என் வாழ்க்கை பக்கங்கள் எல்லாம் 

நீயே நிறைந்திருக்கிறாய்

உன்னை சந்தித்து 

பின்னர் சிந்தித்து 

என்றும் 

நொந்து கொண்டது எல்லாம் போதுமடி 

வரம் நீ 

சாபம் ஏனடி 

எனக்கு பரிசாக தந்தாய் ?

அந்த கருணையுள்ள 

கடவுளிடம் 

நேருக்கு நேராய் 

உரக்கச் சொல்கிறேன் 

கண்ணை மூடி 

தவமிருக்க வேண்டுமா ?

பட்டினி கிடந்து 

விரதமிருக்க வேண்டுமா ?

கை நரம்புகளை கிழித்து கொண்டு 

இரத்த அபிஷேகம் 

செய்ய வேண்டுமா ?

அவளுக்காக 

எதையும் செய்வேன் 

அவளை இழப்பதை தவிர 


இன்னொரு ஜென்மமாவது 

அவள் பிரியத்தை 

பிரியாத வரம் கொடு இறைவா !

நீ ஈவு ,இரக்கமுள்ளவன் என்று 

என் கல்லறையின் மேல் 

இறுதி சாசனம் 

எழுதி விட்டுச் செல்கிறேன்.


நௌஷாத் கான் .லி

Related News

Follow US

TODAY'S POLL

vote-image

தேசிய ஓய்வூதிய முறையின் கீழ் கிடைக்கும் 'வரி சலுகைகள்' ஒருங்கிணைந்த ஓய்வூதிய திட்டத்திற்கும் பொருந்தும். இது ஒருங்கிணைந்த ஓய்வூதியத் திட்டத்தைத் தேர்வுசெய்ய ஊழியர்களை ஊக்குவிக்குமா?

50%
50%