பிஹார் வரைவு வாக்காளர் பட்டியலில் நீக்கப்பட்ட 65 லட்சம் பேர் விவரத்தை வெளியிட வேண்டும்: தேர்தல் ஆணையத்துக்கு உச்ச நீதிமன்றம் உத்தரவு

பிஹார் வரைவு வாக்காளர் பட்டியலில் நீக்கப்பட்ட 65 லட்சம் பேர் விவரத்தை வெளியிட வேண்டும்: தேர்தல் ஆணையத்துக்கு உச்ச நீதிமன்றம் உத்தரவு

புதுடெல்லி:

பிஹார் சட்டப்பேரவைக்கு விரைவில் தேர்தல் நடைபெற உள்ளது. இந்நிலையில், அம்மாநிலத்தில் வாக்காளர் பட்டியல் சிறப்பு தீவிர திருத்தம் மேற்கொள்ளப்படும் என கடந்த ஜூன் 24-ம் தேதி தேர்தல் ஆணையம் அறிவித்தது. தேர்தலுக்கு குறைவான அவகாசமே உள்ள நிலையில் தேர்தல் ஆணையத்தின் இந்த முடிவுக்கு எதிர்க்கட்சிகள் கடும் கண்டனம் தெரிவித்து வருகின்றன.


இந்த உத்தரவை எதிர்த்து ஜனநாயக சீர்திருத்த சங்கம் (ஏடிஆர்) உட்பட பல்வேறு தரப்பினர் சார்பில் உச்ச நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்யப்பட்டது. இதனிடையே, வாக்காளர் பட்டியல் சிறப்பு திருத்தம் முடிந்து, வரைவு பட்டியலை கடந்த 1-ம் தேதி ஆணையம் வெளியிட்டது. அதில், சுமார் 65 லட்சம் வாக்காளர்களின் பெயர்கள் நீக்கப்பட்டுள்ளன.


இந்நிலையில், ஏடிஆர்​ சார்​பில்​ புதி​தாக தாக்​கல்​ செய்​யப்​பட்​ட மனு​வில்​, “வரைவு வாக்​காளர்​ பட்​டியலில்​ இருந்​து 65 லட்​சம்​ பேர்​ எதற்​காக நீக்​கப்​பட்​டனர்​ என்​ற விவரத்​தை வெளி​யிட​வில்​லை. உயி​ரிழந்​தவர்​கள் அல்​லது புலம்​பெயர்ந்​தவர்​கள்​ பெயர்​ விவரங்​களை வெளி​யிட உத்​தர​விட வேண்​டும்​’’ என கோரப்​பட்​டிருக்​கிறது.


இந்​த மனு நீதிப​தி​கள்​ சூர்​யகாந்த்​, உஜ்ஜல்​ புயான்​ மற்​றும்​ என்​.கோடீஸ்​வர்​ சிங்​ ஆகியோர்​ அடங்​கிய அமர்​வு முன்​பு நேற்​று வி​சா​ரணைக்​கு வந்​தது. அப்​போது, ஏடிஆர்​ சார்​பில்​ ஆஜரான மூத்​த வழக்​கறிஞர்​ பிர​சாந்த்​ பூஷண்​, “நீக்​கப்​பட்​ட வாக்​காளர்​ பட்​டியலை அரசி​யல்​ கட்​சிகளிடம்​ தேர்​தல்​ ஆணை​யம்​ வழங்​கி இருக்​கிறது. ஆனால்​, அவர்​கள்​ உயி​ரிழந்​தார்​களா, நிரந்​தர​மாக புலம்​பெயர்ந்​தார்​களா என்​ற விவரம்​ இல்​லை. இந்​த விவரத்​தை வெளி​யிட உத்​தர​விட வேண்​டும்​’’ என்​றார்.


இதையடுத்​து, மனு​தா​ரர்​ கோரு​வது போல முழு விவரத்​தை​யும்​ வரும்​ 9-ம்​ தேதிக்​குள்​ தேர்​தல்​ ஆணை​யம்​ வெளி​யிட வேண்​டும்​ என நீதிப​தி​கள்​ உத்​தர​விட்​டனர்​. மேலும்​ இது தொடர்​பான அனைத்​து மனுக்​கள்​ மீதும்​ வரும்​ 12-ம்​ தேதி வி​சா​ரணை நடை​பெறும்​ என்​றும்​ நீதிப​தி​கள்​ அறி​வித்​தனர்​.

Related News

Follow US

TODAY'S POLL

vote-image

தேசிய ஓய்வூதிய முறையின் கீழ் கிடைக்கும் 'வரி சலுகைகள்' ஒருங்கிணைந்த ஓய்வூதிய திட்டத்திற்கும் பொருந்தும். இது ஒருங்கிணைந்த ஓய்வூதியத் திட்டத்தைத் தேர்வுசெய்ய ஊழியர்களை ஊக்குவிக்குமா?

50%
50%