புல்வாமா வீரர்களின் தியாகத்தை நினைவுகூர்ந்த பிரதமர் மோடி!

புல்வாமா வீரர்களின் தியாகத்தை நினைவுகூர்ந்த பிரதமர் மோடி!


 

புல்வாமா தாக்குதலின் 7 ஆம் ஆண்டு நினைவு தினத்தையொட்டி வீரர்களின் தியாகத்தை பிரதமர் மோடி நினைவுகூர்ந்துள்ளார்.


புல்வாமா தாக்குதலின் 7-ஆம் ஆண்டு நினைவு நாள் இன்று பிப்ரவரி 14 அனுசரிக்கப்படுகிறது.


கடந்த 2019-ஆம் ஆண்டு இதே நாளில் ஜம்மு-காஷ்மீரின் புல்வாமா பகுதியில் ஜம்முவில் இருந்து ஸ்ரீநகருக்கு வீரர்களை ஏற்றிக்கொண்டு சென்ற ராணுவ வாகனங்கள் மீது பயங்கரவாதிகள் தற்கொலைப்படை தாக்குதல் நடத்தினர். இந்த துயர சம்பவத்தில் 40 சிஆர்ஃபிஎப் வீரர்கள் உயிரிழந்தனர்.


இதுதொடர்பாக பிரதமர் மோடி வெளியிட்ட சமூக வலைத்தளப் பதிவில்,


2019-ம் ஆண்டு இந்த நாளில் புல்வாமாவில் தங்கள் உயிரைத் தியாகம் செய்த துணிச்சலான வீரர்களை நினைவு கூர்கிறேன்.


அவர்களது தேசத்திற்கான சேவை நம் உணர்வில் என்றும் பதிந்திருக்கும். ஒவ்வொரு இந்தியர்களும் அவர்களின் துணிச்சலைக் கண்டு உத்வேகம் பெறுகின்றனர். இவ்வாறு பிரதமர் மோடி பதிவிட்டுள்ளார்.


Related News

Follow US

TODAY'S POLL

vote-image

தேசிய ஓய்வூதிய முறையின் கீழ் கிடைக்கும் 'வரி சலுகைகள்' ஒருங்கிணைந்த ஓய்வூதிய திட்டத்திற்கும் பொருந்தும். இது ஒருங்கிணைந்த ஓய்வூதியத் திட்டத்தைத் தேர்வுசெய்ய ஊழியர்களை ஊக்குவிக்குமா?

50%
50%