பெண்ணாடம் அருகே நலம் காக்கும் ஸ்டாலின் மருத்துவ முகாம் நடைபெற்றது.
Jan 03 2026
20
கடலூர், ஜன.3-
கடலூர் மாவட்டம், பெண்ணாடம் அடுத்த இறையூர் அருணா மேல்நிலைப் பள்ளியில் நலம் காக்கும் ஸ்டாலின் மருத்துவ முகாம் நல்லூர் வட்டார மருத்துவ அலுவலர் தமிழரசன் தலைமையில் நடந்தது.
இந்நிகழ்ச்சியில் 500க்கும் மேற்பட்ட பொதுமக்கள் கலந்து கொண்டு பயனடைந்தனர். அருணா பள்ளி தாளாளர் ஞானபிரகாசம , திட்டக்குடி அரசு மருத்துவமனை தலைமை மருத்துவர் சேபானந்தம், தொளார் மருத்துவர் செல்லப்பெருமாள், பெண்ணாடம் மருத்துவர் ராமகிருஷ்ணன் மற்றும் இருதய சிகிச்சை பிரிவு, முகப்பெருத்துறை, மக்களைத் தேடி மருத்துவம், முதலமைச்சரின் விரிவான காப்பீட்டு திட்ட மருத்துவர் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர். இம்முகாமில் கண், இருதயம், மகப்பேறு மருத்துவம், பல், நரம்பியல் துறை உள்ளிட்ட பல்வேறு துரைகளைச் சேர்ந்த மருத்துவர்கள் முகாமில் கலந்து கொண்ட பொதுமக்களுக்கு மருத்துவ சிகிச்சைகளை செய்தனர். இதில் சுமார் 500க்கும் மேற்பட்ட பொதுமக்கள் கலந்து கொண்டு பயனடைந்தனர்.
Related News
TODAY'S POLL
தேசிய ஓய்வூதிய முறையின் கீழ் கிடைக்கும் 'வரி சலுகைகள்' ஒருங்கிணைந்த ஓய்வூதிய திட்டத்திற்கும் பொருந்தும். இது ஒருங்கிணைந்த ஓய்வூதியத் திட்டத்தைத் தேர்வுசெய்ய ஊழியர்களை ஊக்குவிக்குமா?