போரை முடிவுக்கு கொண்டு வர உக்ரைன் விரும்பவில்லை: புதின் குற்றச்சாட்டு

போரை முடிவுக்கு கொண்டு வர உக்ரைன் விரும்பவில்லை: புதின் குற்றச்சாட்டு



அமைதி பேச்சுவார்த்தை மூலம் போரை முடிவுக்கு கொண்டுவருவது குறித்து உக்ரைன் ஆர்வம் காட்டவில்லை என ரஷ்ய அதிபர் புதின் குற்றம் சாட்டியுள்ளார்.


ரஷ்யாவிற்கும், உக்ரைனுக்கும் இடையிலான நான்கு ஆண்டுகால மோதலை முடிவுக்குக் கொண்டுவருவது குறித்து பேச்சுவார்த்தைகள் நடந்து வரும் நிலையில், உக்ரைன் அதிபர் ஜெலென்ஸ்கி, புளோரிடாவில் அமெரிக்க அதிபர் டிரம்ப்பை சந்திக்க உள்ளார். உக்ரைனில் அமைதியை ஏற்படுத்த உலக நாட்டு தலைவர்கள் வலியுறுத்தி வருகின்றனர்.


ஆனாலும், ரஷ்யா நேற்று உக்ரைன் மீது 500 ட்ரோன்கள் மற்றும் 40 ஏவுகணைகளை வீசி தாக்குதல் நடத்தியது. இந்நிலையில், ரஷ்ய அதிபர் புதின் கூறியதாவது:


உக்ரைன் மோதலை அமைதியான முறையில் தீர்க்க விரும்பவில்லை. அமைதிப் பேச்சுவார்த்தை மூலம் போரை முடிவுக்கு கொண்டுவர உக்ரைன் ஆர்வம் காட்டவில்லை. உக்ரைன் போரை முடிவுக்கு கொண்டு வர விரும்பவில்லை என்றால், ராணுவ நடவடிக்கை மூலம் இலக்குகளை அடைவோம்.


இவ்வாறு புதின் கூறியுள்ளார்.


Related News

Follow US

TODAY'S POLL

vote-image

தேசிய ஓய்வூதிய முறையின் கீழ் கிடைக்கும் 'வரி சலுகைகள்' ஒருங்கிணைந்த ஓய்வூதிய திட்டத்திற்கும் பொருந்தும். இது ஒருங்கிணைந்த ஓய்வூதியத் திட்டத்தைத் தேர்வுசெய்ய ஊழியர்களை ஊக்குவிக்குமா?

50%
50%