போலீசாரிடம் வாக்குவாதம்: எச். ராஜா மீது 3 பிரிவுகளில் வழக்கு!
Dec 12 2025
97
பாஜக தலைவர்களில் ஒருவரான எச். ராஜா, சிவகங்கை மாவட்டம், காரைக்குடியில் இருந்து டிசம்பர் 4 அன்று திருப்ப ரங்குன்றத்திற்கு சென்றார். வழியில், அவரை திருப்பத் தூர் அருகே கும்மங்குடி யில் துணை காவல் கண்கா ணிப்பாளர் செல்வகுமார் தலைமையிலான போலீசார் தடுத்து நிறுத்தினர். திருப் பரங்குன்றம் பகுதியில் 144 தடை உத்தரவு இருப்பதால் செல்ல அனுமதியில்லை என்று கூறினர். அப்போது, போலீசாருடன் எச். ராஜா தகராறில் ஈடுபட்டார். இந்நிலையில், பொது அமைதிக்கு குந்தகம் விளை வித்தல், மதக் கலவரத்தை தூண்டுதல், அரசு ஊழிய ருக்கு கீழ்படியாமை ஆகிய 3 பிரிவுகளின் கீழ் நாச்சி யாபுரம் போலீசார் எச். ராஜா மீது வழக்குப்பதிவு செய்துள் ளனர்.
Related News
TODAY'S POLL
தேசிய ஓய்வூதிய முறையின் கீழ் கிடைக்கும் 'வரி சலுகைகள்' ஒருங்கிணைந்த ஓய்வூதிய திட்டத்திற்கும் பொருந்தும். இது ஒருங்கிணைந்த ஓய்வூதியத் திட்டத்தைத் தேர்வுசெய்ய ஊழியர்களை ஊக்குவிக்குமா?