வாடிப்பட்டி, பிப்.14-
மதுரை மாவட்டம் வாடிப்பட்டி மூவேந்தர் முன்னேற்றக் கழக அலுவலகத்தில் மாநில பொருளாளர் நாகராஜன் 45 வது ஆண்டு சபரிமலை சபரிமலை ஐயப்பன் யாத்திரியை முன்னிட்டு ஏழை எளிய மகளிர்க்கு நலத்திட்ட உதவிகள் வழங்கும் நிகழ்ச்சி நடந்தது. இந்த நிகழ்ச்சிக்கு மாவட்ட தலைவர் எம் கே கணேசன் தலைமை தாங்கினார் மாவட்ட செயலாளர் செந்தில் பாண்டி முன்னிலை வகித்தார். ஒன்றிய தலைவர் கருப்பையா வரவேற்றார். இந்த நிகழ்ச்சியில் ஏழை எளியோருக்கு இலவச சேலைகளை மாநில பொருளாளர் நாகராஜன் வழங்கினார். இதில் கட்சி நிர்வாகிகள் விவசாய அணி செயலாளர் வையாபுரி, நாகசுப்பிரமணி, கவின் உள்பட பலர் கலந்து கொண்டனர். முடிவில்
தொழிலாளர் அணி செயலாளர் செல்வம் நன்றி கூறினார்.
Related News
TODAY'S POLL
தேசிய ஓய்வூதிய முறையின் கீழ் கிடைக்கும் 'வரி சலுகைகள்' ஒருங்கிணைந்த ஓய்வூதிய திட்டத்திற்கும் பொருந்தும். இது ஒருங்கிணைந்த ஓய்வூதியத் திட்டத்தைத் தேர்வுசெய்ய ஊழியர்களை ஊக்குவிக்குமா?