மகாகவி பாரதி !

மகாகவி பாரதி !

கவிஞர் இரா .இரவி 


எழுதியபடி வாழ்ந்தவன்

வாழ்ந்தபடி எழுதியவன்

மகாகவி பாரதி !


புதுமைக்கும் மரபுக்கும்

பாலம் அமைத்தவன்

மகாகவி பாரதி !


விடுதலை விதையை

விருட்சமாக வளர்த்தவன்

மகாகவி பாரதி !


மற்றவரை மதித்தவன்

சுயமரியாதை மிக்கவன்

மகாகவி பாரதி !


வறுமையிலும் செம்மை

ஏழ்மையிலும் நேர்மை

மகாகவி பாரதி !


பா ரதம் செலுத்திய

பாக்களின் சாரதி

மகாகவி பாரதி !


பெண் விடுதலைக்கு

போர்முரசு கொட்டியவன்

மகாகவி பாரதி !

வாழ்வில் ஆசைப்பட்டவன்

பேராசைப்படாதவன்

மகாகவி பாரதி !


மூடப் பழக்கங்களுக்கு

மூடு விழா நடத்தியவன்

மகாகவி பாரதி ! 


பகுத்தறிவைப் பயன்படுத்தி

பாடல்கள் புனைந்தவன்

மகாகவி பாரதி !


அழியாத பாடல்கள்

அகிலத்திற்கு வழங்கியவன்

மகாகவி பாரதி !


வெள்ளையர்களை விரட்டிய

காரணிகளில் ஒன்றானவன்

மகாகவி பாரதி !


வாழ்ந்த காலம் முப்பத்தொன்பது

பாடல்களின் காலம் பல நூற்றாண்டு 

மகாகவி பாரதி !  


மொழிகள் பல பயின்றவன்

தமிழே சிறப்பு அறிவித்தவன்

மகாகவி பாரதி !

Related News

Follow US

TODAY'S POLL

vote-image

தேசிய ஓய்வூதிய முறையின் கீழ் கிடைக்கும் 'வரி சலுகைகள்' ஒருங்கிணைந்த ஓய்வூதிய திட்டத்திற்கும் பொருந்தும். இது ஒருங்கிணைந்த ஓய்வூதியத் திட்டத்தைத் தேர்வுசெய்ய ஊழியர்களை ஊக்குவிக்குமா?

50%
50%