மத்திய பட்ஜெட் : சரிவுடன் தொடங்கிய பங்குச் சந்தை!

மத்திய பட்ஜெட் : சரிவுடன் தொடங்கிய பங்குச் சந்தை!


 

2026 - 27ஆம் ஆண்டுக்கான மத்திய பட்ஜெட் தாக்கல் செய்யப்படவுள்ள நிலையில், இந்திய பங்குச் சந்தை இன்று (பிப். 1) சரிவுடன் தொடங்கியது. சென்செக்ஸ் 296 புள்ளிகளுடனும் நிஃப்டி 122 புள்ளிகளுடன் சரிவுடன் தொடங்கின.


மத்திய பட்ஜெட் இன்று தாக்கல் செய்யப்படவுள்ளதால், ஞாயிற்றுக்கிழமையான இன்றும் பங்குச் சந்தைகள் செயல்படுகின்றன. தங்கம், வெள்ளி விலை தொடர்ந்து உயர்ந்து வரும் நிலையில், இந்த ஆண்டு பட்ஜெட்டில் பல முக்கிய அறிவிப்புகள் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.


காலை 9.30 மணி நிலவரப்படி, மும்பை பங்குச் சந்தை குறியீட்டு எண் சென்செக்ஸ் 286 புள்ளிகள் சரிந்து 82,293 புள்ளிகளுடன் வணிகமாகி வருகின்றன.


இதேபோன்று தேசிய பங்குச் சந்தை குறியீட்டி எண் நிஃப்டி 117 புள்ளிகள் சரிந்து 25,312 புள்ளிகளாக வணிகமாகி வருகிறது. சென்செக்ஸ் பட்டியலில் உள்ள முதல் 30 தரப் பங்குகளில் 14 நிறுவனங்களின் பங்குகள் ஏற்றத்தில் உள்ளன. எஞ்சிய 16 நிறுவனங்களின் பங்குகள் சரிவுடன் வணிகமாகி வருகின்றன.


Related News

Follow US

TODAY'S POLL

vote-image

தேசிய ஓய்வூதிய முறையின் கீழ் கிடைக்கும் 'வரி சலுகைகள்' ஒருங்கிணைந்த ஓய்வூதிய திட்டத்திற்கும் பொருந்தும். இது ஒருங்கிணைந்த ஓய்வூதியத் திட்டத்தைத் தேர்வுசெய்ய ஊழியர்களை ஊக்குவிக்குமா?

50%
50%