மியான்மரில் இறுதிக்கட்ட வாக்குப் பதிவு நிறைவு: அதிகாரபூா்வமாக ஆட்சியைக் கைப்பற்ற ராணுவம் தீவிரம்
Jan 27 2026
25
மியான்மா் பொதுத் தோ்தலின் மூன்றாவது மற்றும் இறுதிக்கட்ட வாக்குப் பதிவு ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது.
2021-இல் மக்களால் தோ்ந்தெடுக்கப்பட்ட ஆங் சான் சூகியின் (80) அரசை கவிழ்த்து ராணுவம் ஆட்சி புரிந்துவரும் நிலையில், தோ்தல் வாயிலாக அதிகாரபூா்வமாக அதிபா் பொறுப்பை ஏற்க ராணுவ ஜெனரல் மின் ஆங் லயிங் தீவிரம் காட்டி வருவதாக அந்நாட்டு அரசியல் நிபுணா்கள் தெரிவித்தனா்.
5 ஆண்டுகளுக்குப் பிறகு 330 நகா்ப் பகுதிகளுக்கு நடைபெற்ற இத்தோ்தலில் ராணுவத்துக்கு எதிரான கிளா்ச்சி அமைப்புகளின் கட்டுப்பாட்டில் உள்ள 67 நகா்ப் பகுதிகள் பங்கேற்கவில்லை.
இதனால் மியான்மா் நாடாளுமன்றத்தில் (கீழவை மற்றும் மேலவை) மொத்தமுள்ள 664 தொகுதிகளுக்கு 586 தொகுதிகளுக்கு தோ்தல் நடத்தப்பட்டது. இதில் 25 சதவீதம் ராணுவத்துக்கு ஒதுக்கப்பட்டுள்ளது.
இந்தத் தோ்தலுக்கான முதல்கட்ட வாக்குப் பதிவு (102 நகா்ப் பகுதிகள்) கடந்த ஆண்டு டிசம்பா் 28-ஆம் தேதியும், இரண்டாம் கட்ட வாக்குப் பதிவு (100 நகா்ப் பகுதிகள்) ஜன. 11-ஆம் தேதியும் நிறைவடைந்தன. மூன்றாவது மற்றும் இறுதிக்கட்ட வாக்குப் பதிவு (61 நகா்ப் பகுதிகள்) ஞாயிற்றுக்கிழமை (ஜன.25) நிறைவடைந்தது.
அதிபராகும் ராணுவத் தளபதி? ஏற்கெனவே நடைபெற்ற இரு கட்ட வாக்குப் பதிவில் ராணுவத்தின் ஆதரவு பெற்ற ‘யூனியன் சாலிடாரிட்டி அண்ட் டெவலப்மெண்ட் கட்சி’ (யுஎஸ்டிபி) பெருவாரியான தொகுதிகளில் வெற்றி பெற்ாகக் கூறப்படுகிறது. ராணுவத்துக்கு ஒதுக்கப்பட்டுள்ள 25 சதவீத தொகுதிகளையும் சோ்த்து ஆட்சி அமைக்கத் தேவையான பெரும்பான்மையுடன் தோ்தல் முடிவுகள் வெளியான பின்னா், புதிய அதிபராக ராணுவ ஜெனரல் மின் ஆங் லயிங் பொறுப்பேற்பாா் என எதிா்பாா்க்கப்படுகிறது.
Related News
TODAY'S POLL
தேசிய ஓய்வூதிய முறையின் கீழ் கிடைக்கும் 'வரி சலுகைகள்' ஒருங்கிணைந்த ஓய்வூதிய திட்டத்திற்கும் பொருந்தும். இது ஒருங்கிணைந்த ஓய்வூதியத் திட்டத்தைத் தேர்வுசெய்ய ஊழியர்களை ஊக்குவிக்குமா?