மும்பை தாக்குதலுக்கு பிறகு அமெரிக்காவின் அழுத்தத்தால் பாக். மீது போர் தொடுக்கவில்லை: ப.சிதம்பரம் ஒப்புதல்

மும்பை தாக்குதலுக்கு பிறகு அமெரிக்காவின் அழுத்தத்தால் பாக். மீது போர் தொடுக்கவில்லை: ப.சிதம்பரம் ஒப்புதல்



புதுடெல்லி: ​மும்பை தாக்​குதலுக்கு பதிலடி​யாக பாகிஸ்​தானுக்கு எதி​ராக போரை தொடங்க வேண்​டாம் என்று அமெரிக்கா உள்ளிட்ட நாடு​கள் தடுத்​த​தாக முன்​னாள் மத்​திய அமைச்​சர் ப.சிதம்​பரம் கூறி​னார். காங்​கிரஸ் தலை​மையி​லான ஐக்​கிய முற்போக்கு கூட்​டணி ஆட்​சி​யில், கடந்த 2008, நவம்​பர் 26-ம் தேதி மும்​பை​யின் முக்​கிய இடங்​களில் பாகிஸ்​தானை சேர்ந்த லஷ்கர்​-இ-தொய்பா தீவிர​வா​தி​கள் கொடூர தாக்​குதல் நடத்​தினர்.


இதில் 166 பேர் உயி​ரிழந்​தனர். 300-க்​கும் மேற்​பட்​டோர் காயம் அடைந்​தனர். இதன் பிறகு மத்​திய உள்​துறை அமைச்​ச​ராக இருந்த சிவ​ராஜ் பாட்​டீல் பதவி வில​கி​னார். அப்​போதைய நிதி அமைச்​சர் ப.சிதம்​பரம் உள்​துறை அமைச்​ச​ராக பொறுப்​பேற்​றார்.


இந்​நிலை​யில் செய்தி சேனல் ஒன்​றுக்கு ப.சிதம்​பரம் அளித்த பேட்​டி​யில் கூறிய​தாவது: மும்பை தாக்​குதலுக்கு பதிலடி​யாக பாகிஸ்​தான் மீது ராணுவ நடவடிக்கை எடுக்க இந்​தியா பரிசீலித்​தது. ஆனால் அமெரிக்கா உள்​ளிட்ட சர்​வ​தேச சமூகத்​தின் அழுத்​தம் மற்​றும் மூத்த ராஜதந்​திரி​களின் ஆலோ​சனை காரண​மாக அந்த முடிவு கைவிடப்​பட்​டது. போரை தொடங்க வேண்​டாம் என்று ஒட்​டுமொத்த நாடு​களும் கூறின.


நான் உள்​துறை அமைச்​ச​ராக பொறுப்​பேற்ற 2, 3 நாட்​களுக்கு பிறகு என்​னை​யும் அப்​போதைய பிரதமர் மன்​மோகன் சிங்​கை​யும் அமெரிக்க வெளி​யுறவு அமைச்​சர் காண்​டலீசா ரைஸ் சந்​தித்​தார். பதிலடி கொடுக்க வேண்​டாம் என கேட்​டுக்​கொண்​டார். இது அரசு எடுக்க வேண்​டிய முடிவு என்று நான் கூறினேன். ஆனாலும் பதிலடி கொடுக்க வேண்​டும் என்ற சிந்​தனை என் மனதில் இருந்​தது. இவ்​வாறு ப.சிதம்​பரம் கூறி​னார்.


பாஜக விமர்​சனம்: இதையடுத்து ‘எக்​ஸ்' தளத்​தில் மத்​திய அமைச்​சர் பிரகலாத் ஜோஷி வெளி​யிட்ட பதி​வில், “தேசம் அறிந்​ததை 17 ஆண்​டு​களுக்​குப் பிறகு ப.சிதம்​பரம் ஒப்​புக்​கொள்​கிறார். வெளி​நாட்டு சக்​தி​களின் அழுத்​தம் காரண​மாக அப்​போது இந்த விவ​காரம் தவறாக கையாளப்​பட்​டது. இது மிக​வும் தாமத​மான ஒப்​புதல்’’ என்று கூறி​யுள்​ளார்.


ஆபரேஷன் சிந்​தூர்: பாகிஸ்​தானுக்கு எதி​ரான ஆபரேஷன் சிந்​தூர் ராணுவ நடவடிக்கை தனது தலை​யீட்​டால் நிறுத்​தப்​பட்​ட​தாக அமெரிக்க அதிபர் ட்ரம்ப் கூறியதை தொடர்ந்து மத்​திய அரசை காங்​கிரஸ் உள்​ளிட்ட கட்​சிகள் கடுமை​யாக விமர்​சித்த நிலை​யில்​ ப.சிதம்​பரத்​தின் இந்த​ ஒப்​புதல்​ வெளி​யாகியுள்​ளது.


Related News

Follow US

TODAY'S POLL

vote-image

தேசிய ஓய்வூதிய முறையின் கீழ் கிடைக்கும் 'வரி சலுகைகள்' ஒருங்கிணைந்த ஓய்வூதிய திட்டத்திற்கும் பொருந்தும். இது ஒருங்கிணைந்த ஓய்வூதியத் திட்டத்தைத் தேர்வுசெய்ய ஊழியர்களை ஊக்குவிக்குமா?

50%
50%