ரயில்வே புதிய கால அட்டவணை வெளியீடு: 65 மெயில், விரைவு ரயில்களின் வேகம் அதிகரிப்பு
Dec 31 2025
75
சென்னை: தெற்கு ரயில்வேயின் புதிய கால அட்டவணை நேற்று வெளியிடப்பட்டது. இதில், சென்னை எழும்பூரில் இருந்து புறப்படும் சில விரைவு ரயில்களின் நேரம் மாற்றப்பட்டுள்ளது மேலும், சென்னை சென்ட்ரல் - அரக்கோணம் மெமு ரயில் உட்பட 28 ரயில்களின் எண்கள் ஜன.1 முதல் மாற்றப்பட உள்ளன. 102 ரயில்களுக்கு கூடுதல் நிறுத்தம் தற்காலிக அடிப்படையில் வழங்கப்பட்டுள்ளது.
கொல்லம் - தாம்பரம், நாகர்கோவில் - தாம்பரம், செங்கோட்டை - சென்னை எழும்பூர், எழும்பூர் - குருவாயூர், எழும்பூர் - மங்களூர் சென்ட்ரல், எழும்பூர் - ராமேசுவரம், எழும்பூர் - செங்கோட்டை தினசரி ரயில்கள் உட்பட 65 மெயில், விரைவு, அதிவேக ரயில்களின் வேகம் ஜன.1-ம் தேதி முதல் அதிகரிக்கப்பட உள்ளது. இதன் மூலம் 5 நிமிடம் முதல் 85 நிமிடங்கள் வரை சேமிக்கப்படும். இத்தகவல், தெற்கு ரயில்வே வெளியிட்ட செய்திக்குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
Related News
TODAY'S POLL
தேசிய ஓய்வூதிய முறையின் கீழ் கிடைக்கும் 'வரி சலுகைகள்' ஒருங்கிணைந்த ஓய்வூதிய திட்டத்திற்கும் பொருந்தும். இது ஒருங்கிணைந்த ஓய்வூதியத் திட்டத்தைத் தேர்வுசெய்ய ஊழியர்களை ஊக்குவிக்குமா?