ரஷ்ய எண்ணெய் நிறுவனங்கள் மீது அமெரிக்கா தடை

ரஷ்ய எண்ணெய் நிறுவனங்கள் மீது அமெரிக்கா தடை



ரோஸ்நெஃப்ட், லூகோயில் ஆகிய இரு பெரிய ரஷ்ய அரசு எண்ணெய் நிறுவனங்கள் மீது அமெரிக்கா தடை விதித்துள்ளது. ரஷ்யா மீது மேலும் அதிக அழுத்தம் கொடுக்கவே இத்தடை விதிக்கப்பட்டுள்ளது என அமெரிக்க கருவூலத் துறைச் செயலாளர் ஸ்காட் பெசென்ட் வெளியிட்ட அறிக்கையில் இருந்து தெரிய வந்துள்ளது. மேலும் அதிக தடை நடவடிக்கைக ளை விதிக்க உள்ளதாகவும் இத்தடைகளில் தனது நட்பு நாடுகளும் இணைய வேண்டும் என அமெரிக்கா தெரிவித்துள்ளது.


ரஷ்யா மீது புதிய தடை ஐரோப்பிய ஒன்றியம் ஒப்புதல்


ரஷ்யா மீது புதிய தடைகள் விதிக்க ஐரோப்பிய ஒன்றியம் ஒப்புதல் அளித்துள்ளது. இது 19 ஆவது தொகுப்பு தடைகள் ஆகும். இதன்படி ரஷ்யாவிடம் இருந்து திரவ இயற்கை எரிவாயுவை இறக்குமதி செய்ய தடை விதிக்கப்பட உள்ளது. பல ஐரோப்பிய நாடுகள் ரஷ்யாவின் குறைந்த விலை எரிவாயுவை சார்ந்துள்ளன. ஆனால் உக்ரைன்- ரஷ்ய போர் துவங்கிய பிறகு அமெரிக்காவின் நெருக்கடி காரணமாக பல ஐரோப்பிய நாடுகள் ரஷ்யாவிற்கு மாற்றாக அமெரிக்காவிடம் அதிக விலைக்கு எரிபொருள் வாங்குகின்றன. 


Related News

Follow US

TODAY'S POLL

vote-image

தேசிய ஓய்வூதிய முறையின் கீழ் கிடைக்கும் 'வரி சலுகைகள்' ஒருங்கிணைந்த ஓய்வூதிய திட்டத்திற்கும் பொருந்தும். இது ஒருங்கிணைந்த ஓய்வூதியத் திட்டத்தைத் தேர்வுசெய்ய ஊழியர்களை ஊக்குவிக்குமா?

50%
50%