வலங்கைமான் வரதராஜன்பேட்டை மகா மாரியம்மன் ஆலயத்தில் நவராத்திரி திருவிழாவில் அம்மன் ஸ்ரீ சரஸ்வதி அலங்காரத்தில் காட்சி

வலங்கைமான் வரதராஜன்பேட்டை மகா மாரியம்மன் ஆலயத்தில் நவராத்திரி திருவிழாவில் அம்மன் ஸ்ரீ சரஸ்வதி அலங்காரத்தில் காட்சி அளித்தார்.
திருவாரூர் மாவட்டம் வலங்கைமான் வரதராஜன்பேட்டை தெருவில் மகா மாரியம்மன் ஆலயம் உள்ளது. இவ்வாலயம் தமிழகத்தில் தலை சிறந்த சக்தி தலங்களில் ஒன்றாகும். இவ்வாலயத்தில் நவராத்திரி திருவிழாவின் நேற்று ஒன்பதாம் நாள் அக்டோபர் 01- ந்தேதி புதன்கிழமை மாலை 6மணிக்கு ஆலயத்தில் அனைத்து சன்னதிகளிலும் பூஜைகள் நடைபெற்று அம்மன் ஸ்ரீ சரஸ்வதி அலங்காரத்தில் காட்சி அளித்தார். இரவு 7 மணிக்கு சமய சொற்பொழிவு நடைபெற்றது, இரவு 8 மணிக்கு சிறப்பு பூஜைகள், தீபாராதனை நடைபெற்று பக்தர்களுக்கும், பொதுமக்களுக்கும் அருட்பிரசாதமும், அன்னதானமும் வழங்கப்பட்டது. ஒன்பதாம் நாள் மண்டகப்படி உபயதாரர் கொடியாளம் து.மதிவாணன் குடும்பத்தினர் சிறப்பாக செய்திருந்தனர்.
நவராத்திரி திருவிழா ஏற்பாடுகளை ஆலய செயல் அலுவலர் கோ.கிருஷ்ணகுமார், தக்கார்/ ஆய்வர் க.மும்மூர்த்தி, மண்டகப்படி உபயதாரர்கள் மற்றும் திருக்கோயில் பணியாளர்கள் சிறப்பாக செய்து வருகின்றனர்.
Related News
Popular News
TODAY'S POLL

தேசிய ஓய்வூதிய முறையின் கீழ் கிடைக்கும் 'வரி சலுகைகள்' ஒருங்கிணைந்த ஓய்வூதிய திட்டத்திற்கும் பொருந்தும். இது ஒருங்கிணைந்த ஓய்வூதியத் திட்டத்தைத் தேர்வுசெய்ய ஊழியர்களை ஊக்குவிக்குமா?