வீட்டு வருமானம், சேவை துறை நிறுவனங்களின் கணக்கெடுப்பின் மூலமாக நாட்டின் பொருளாதார வளர்ச்சி தெரியவரும்: மத்திய புள்ளியியல் துறை
சென்னை: ‘நாட்டின் பொருளாதார வளர்ச்சியை வெளி உலகுக்கு வெளிப்படுத்த, தேசிய வீட்டு வருமானம் மற்றும் ஒருங்கிணைந்த சேவைத் துறை நிறுவனங்களின் வருடாந்திர கணக்கெடுப்பு மிக முக்கியமானது’ என்று மத்திய அரசின் புள்ளியியல் மற்றும் திட்ட அமைச்சகத்தின் பொது இயக்குநர் தெரிவித்தார்.
மத்திய புள்ளியியல் மற்றும் திட்ட அமலாக்க அமைச்சகத்தின் கீழ் உள்ள தேசிய புள்ளியியல் அலுவலகம் சார்பில், தேசிய வீட்டு வருமானம் மற்றும் ஒருங்கிணைந்த சேவைத்துறை நிறுவனங்களின் வருடாந்திரக் கணக்கெடுப்பு குறித்து 2 நாள் பயிலரங்கு சென்னையில் நேற்று தொடங்கியது. நாட்டின் பொருளாதார வளர்ச்சியை வெளி உலகுக்கு வெளிப்படுத்த, தேசிய வீட்டு வருமானம் மற்றும் ஒருங்கிணைந்த சேவைத் துறை நிறுவனங்களின் வருடாந்திர கணக்கெடுப்பு மிக முக்கியமானது’ என்று மத்திய அரசின் புள்ளியியல் மற்றும் திட்ட அமைச்சகத்தின் பொது இயக்குநர் தெரிவித்தார்.
மத்திய புள்ளியியல் மற்றும் திட்ட அமலாக்க அமைச்சகத்தின் கீழ் உள்ள தேசிய புள்ளியியல் அலுவலகம் சார்பில், தேசிய வீட்டு வருமானம் மற்றும் ஒருங்கிணைந்த சேவைத்துறை நிறுவனங்களின் வருடாந்திரக் கணக்கெடுப்பு குறித்து 2 நாள் பயிலரங்கு சென்னையில் நேற்று தொடங்கியது.
இதை மத்திய புள்ளியியல் மற்றும் திட்ட அமைச்சகத்தின் பொது இயக்குநர் கீதா சிங் ரத்தோடு தொடங்கிவைத்துப் பேசியதாவது: நாட்டின் பொருளாதார வளர்ச்சியை வெளி உலகுக்கு எடுத்துக்காட்ட, தேசிய வீட்டு வருமான கணக்கெடுப்பு மற்றும் ஒருங்கிணைந்த சேவைத் துறை நிறுவனங்களின் வருடாந்திர கணக்கெடுப்பு மிக முக்கியமானது.
டிஜிட்டல் முறையில் அகில இந்திய அடிப்படையில் கணக்கெடுப்பின் களப்பணியைத் தொடங்குவதற்கு முன் இது ஒரு ஆயத்த பயிற்சித் திட்டமாகும். ஒவ்வொரு முறை இந்திய அளவில் எடுக்கப்படும் கணக்கெடுப்பு நாட்டுக்கு மிக முக்கியமானது என கவனத்தில்கொண்டு சிரத்தையுடன் கணக்கெடுப்பவர்களுக்கு பயிற்சி அளிக்க வேண்டும்.
அதற்கு இந்த 2 நாள் பயிற்சி பட்டறை மிகவும் பயனுள்ளதாக அமையும். இவ்வாறு அவர் பேசினார். முன்னதாக, அமைச்சகத்தின் கூடுதல் பொது இயக்குநர்கள் அஜய்பக் ஷி, சந்திரமணி சர்மா, கிஷோர்குமார், சலீல் முகோபாத்தியா, சுனிதா உள்ளிட்டோர் பங்கேற்று பேசினர்.
இதுகுறித்து தேசிய புள்ளியியல் அலுவலக அதிகாரிகள் கூறியதாவது: இந்த பயிலரங்கில் நாடுமுழுவதும் இருந்து 260 பேர் பங்கேற்று உள்ளனர். இவர்களுக்கு துறைசார்ந்த நிபுணர்கள் பயிற்சி வழங்குகின்றனர்.
பயிற்சி பெற்ற அலுவலர்கள் ஒவ்வொரு மண்டலங்களில் உள்ள அலுவலர்கள், பணியாளர்களுக்குப் பயிற்சி அளிப்பார்கள். அவர்கள் கணக்கெடுப்பு நடத்துவார்கள். இந்த கணக்கெடுப்பு ஏப்ரல் முதல் அடுத்த ஆண்டு மார்ச் வரை நடத்தப்படும். அதைத் தொடர்ந்து, ஜூன், ஜூலை, ஆகஸ்ட் ஆகிய மாதங்களில் முடிவுகள் வெளியிடப்படும்.
நாடு முழுவதும் தேர்ந்தெடுக்கப்பட்ட இடங்களில் உள்ள வீடுகளில் வீட்டு வருமானம் தொடர்பாகவும், சேவை நிறுவனங்கள், சேவை மேற்கொள்வோர்களிடம் வருமானம் தொடர்பாகவும் கணக்கெடுப்பு நடத்தப்படும். இதன்மூலம் உண்மை பொருளாதாரம் வெளியுலகுக்குத் தெரிய வரும். இவ்வாறு அவர்கள் கூறினர்.