ஸ்ரீ அனுமன் ஜெயந்தி - 2025 சிறப்பு தொகுப்பு

ஸ்ரீ அனுமன் ஜெயந்தி - 2025 சிறப்பு தொகுப்பு



இன்று டிசம்பர் 19 மார்கழி மாத அமாவாசை தினத்தன்று அனுமன் ஜெயந்தி விழா பாரத தேசம் முழுவதும் கொண்டாடப்படுகிறது.


இராமாயணத்தின் மிக முக்கிய கதாபாத்திரத்தில் அனுமனும் ஒருவர். ஸ்ரீ ராமர் மீது வைத்திருந்த அன்பு இந்த பிரபஞ்சத்தை விட பெரியது என்பதை பல முறை நிரூபித்தவர் ஆஞ்சநேயர்.


தர்ம வழியில் நடக்க வேண்டும் என போதித்த ராமபிரானுக்கு மிக நெருங்கியவராக அனுமன் பார்க்கப்படுகிறார். ராமர் மீது பலரும் தங்களின் அன்பு மழை பொழிந்தாலும், தன் அன்புக்கு ஈடாகுமா என்றளவுக்கு அனுமன் அன்பும், மரியாதையும் வைத்திருந்தார்.


ஆனால் இராமர் மீது கொண்டிருந்த பக்தி, அன்பின் காரணமாக தன்னால் முடியும் என அனைத்தையும் முடித்துக் காட்டியவர். நாமும் அனுமனைப் போல் ராமபிரான் மீது முதலில் பக்தி செலுத்தி, நம்மால் எல்லாம் முடியும் என முயற்சி செய்தால் எதையும் செய்து முடிக்கலாம்.


அயோத்தியா காண்டத்தில் குகனின் அன்பு எப்படி ராமனுக்கு அமைந்ததோ, அதே போல் அனுமனின் அன்பும் அமைந்தது.


அனுமனின் சக்தி அவருக்கே தெரியாது என்பார்கள். அது கடல் கடந்து இலங்கைக்கு சென்று முதன் முதலாக சீதா தேவியை பார்த்து வரும் போதும் சரி, சஞ்சீவினி மூலிகைக்காக மலையையே பேர்த்து எடுத்துக் கொண்டு வரும் போதும் சரி, இராமனுக்கு ஏற்பட்ட தோஷத்தைப் போக்க கைலாயத்திலிருந்து சிவ லிங்கத்தை எடுத்து வர சொன்ன போதும் சரி,‌ இதையெல்லாம் செய்து முடிக்க முடியும் என பெரிதாக நம்பவில்லை.


சீதா தேவியை விட அதிக அன்பை வைத்திருந்ததை உணர்த்தும் வகையில், “சீதா தேவி அயோத்தி திரும்பிய பின்னர் அவர்களின் நெற்றியில் செந்தூரம் வைத்திருந்தனர். ஏன் இப்படி வைத்துள்ளீர்கள் என அனுமன் கேட்க, தன் கணவரின் ஆயுள், ஆரோக்கியத்திற்காக என சொன்ன மறுகணம், அங்கிருந்து ஓடிய ஹனுமன், தன் உடல் முழுவதும் செந்தூரத்தை தடவிக் கொண்டு, என் அன்பிற்கினிய, தான் வணங்கும் தெய்வமான இராம பிரான் நீடோடி வாழ வேண்டும் என உடல் முழுவதும்‌‌ செந்தூரத்தை தடவி வந்தவர் அனுமன்.


இப்படிப்பட்ட பக்திமான் அனுமன் பிறந்த தினம் இன்று நாட்டின் பல பகுதிகளில் கொண்டாடப்படுகிறது. தமிழ்நாடு, கேரளாவில் மார்கழி மாதத்தில் வரும்‌ அமாவாசையில்‌ அறிவு, ஞானத்தின் அடையாளமாக திகழ்வது மூல நட்சத்திரத்தில் அவதரித்தார் என கொண்டாடப்படுகிறது.


வட இந்தியா, கர்நாடகாவின் சில பகுதிகளில் பங்குனி மாதம் வரும் பெளர்ணமி தினத்தில் அனுமன் ஜெயந்தியாக கடைப்பிடிக்கப்படுகிறது.



தொகுப்பு: பா. சீனிவாசன்,

வந்தவாசி.

Related News

Follow US

TODAY'S POLL

vote-image

தேசிய ஓய்வூதிய முறையின் கீழ் கிடைக்கும் 'வரி சலுகைகள்' ஒருங்கிணைந்த ஓய்வூதிய திட்டத்திற்கும் பொருந்தும். இது ஒருங்கிணைந்த ஓய்வூதியத் திட்டத்தைத் தேர்வுசெய்ய ஊழியர்களை ஊக்குவிக்குமா?

50%
50%