___________________
*நெல்லை பிப் 11:-
திருநெல்வேலி மாவட்டம் சேரன்மகாதேவி வட்டம் பாப்பாக்குடி ஊராட்சி ஒன்றியம் கபாலிபாறை பநீ செங்குளம் இசக்கியம்மன் ஆலயத்தில் வருடாந்திர கோவில் கொடை விழா நேற்று (10-2-2026) செவ்வாய்க்கிழமை வெகு விமர்சையாக நடைபெற்றது. முன்னதாக கபாலிபாறை பநீ கன்னிவிநாயகர் பநீ வடக்குவாச்செல்வி அம்மன் கோவிலில் இருந்து தொட்டில்பிள்ளை எடுப்பு மற்றும் பால்குட ஊர்வலம் மேளதாள வாத்தியங்களுடன் புறப்பட்டு செங்குளம் சென்றடைந்தது. அதன் பிறகு தொட்டில்பிள்ளை வாங்கும் நிகழ்வு.. சுதை சிற்ப ரூபம் மாற்றும்
வைபவத்துக்குப்பின் சிறப்பு அபிஷேகம் அலங்காரத்துடன் பக்தர்களுக்கு இசக்கியம்மன் காட்சிதந்து அருள்பாலித்தார். அன்னதானத்துடன் மதியக்கொடை இனிதே நிறைவேறியது. மாலை பாயாசம் வைத்து பக்தர்கள் படையல்..இரவு வில்லிசை... நள்ளிரவு உபதெய்வங்களுக்கான அசைவ படையலுடன் விழா இனிதே நிறைவுபெற்றது.*
_____________
*தகவல்:-அரும்பூர். க. குமாரகுரு, மயிலாடுதுறை*
Related News
TODAY'S POLL
தேசிய ஓய்வூதிய முறையின் கீழ் கிடைக்கும் 'வரி சலுகைகள்' ஒருங்கிணைந்த ஓய்வூதிய திட்டத்திற்கும் பொருந்தும். இது ஒருங்கிணைந்த ஓய்வூதியத் திட்டத்தைத் தேர்வுசெய்ய ஊழியர்களை ஊக்குவிக்குமா?