செய்திகள்
தமிழ்நாடு-Tamil Nadu
*பூவராக பெருமாள் கோவிலில் ரதசப்தமி சிறப்பு பூஜைகள்..!*
Jan 25 2026
13
வந்தவாசி, ஜன 26:
திருவண்ணாமலை மாவட்டம், வந்தவாசி அடுத்த கொடியாலம் ஸ்ரீ பூவராக பெருமாள் கோவிலில் நேற்று ரதசப்தமி முன்னிட்டு மூல மூர்த்திகளுக்கு பால், தயிர், சந்தனம், இளநீர் உள்ளிட்ட வாசனை திரவியங்கள் கொண்டு விசேஷ திருமஞ்சனம் நடந்தேறியது. பிறகு உற்சவ மூர்த்திகள் சிறப்பு அலங்காரத்தில் மேளதாளத்துடன் கோவில் பிரகாரத்தில் வீதியுலா வந்தார். முன்னதாக ஹோம பூஜைகள் நடைபெற்றன. இந்த வைபவத்தில் சுற்றியுள்ள பகுதிகளில் இருந்து திரளான பக்தர்கள் கலந்து கொண்டு தரிசனம் செய்தனர். நடைபெற்றன. பங்கேற்ற அனைவருக்கும் தீர்த்த பிரசாதங்கள் வழங்கப்பட்டது.
பா. சீனிவாசன், வந்தவாசி.
Related News
TODAY'S POLL
தேசிய ஓய்வூதிய முறையின் கீழ் கிடைக்கும் 'வரி சலுகைகள்' ஒருங்கிணைந்த ஓய்வூதிய திட்டத்திற்கும் பொருந்தும். இது ஒருங்கிணைந்த ஓய்வூதியத் திட்டத்தைத் தேர்வுசெய்ய ஊழியர்களை ஊக்குவிக்குமா?
50%
50%