செய்திகள்
தமிழ்நாடு-Tamil Nadu
*வந்தவாசி ஜலகண்டேஸ்வரர் கோயில் பிரம்மோற்சவ விழா கொடியேற்றத்துடன் தொடக்கம்..!*
வந்தவாசி, பிப் 22:
திருவண்ணாமலை மாவட்டம், வந்தவாசி ஸ்ரீ சத்புத்ரி நாயகி சமேத ஸ்ரீ ஜலகண்டேஸ்வரர் திருக்கோயிலில் நேற்று மாசி மகம் பிரம்மோற்சவ விழா கொடியேற்றத்துடன் தொடங்கியது. இந்த வைபவத்தில் மூல மூர்த்திகளுக்கு விசேஷ திருமஞ்சனம் நடந்தேறியது. பிறகு யாகசாலை பூஜைகள் மற்றும் வேத மந்திரங்கள் முழங்க கொடியேற்றம் நடைபெற்றது. பிறகு உற்சவ மூர்த்திகள் மேளதாளத்துடன் வீதியுலா வந்தனர். இந்த வைபவத்தில் சுற்றியுள்ள பகுதிகளில் இருந்து ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு தரிசனம் செய்தனர்.
பா. சீனிவாசன், வந்தவாசி.
Related News
TODAY'S POLL
தேசிய ஓய்வூதிய முறையின் கீழ் கிடைக்கும் 'வரி சலுகைகள்' ஒருங்கிணைந்த ஓய்வூதிய திட்டத்திற்கும் பொருந்தும். இது ஒருங்கிணைந்த ஓய்வூதியத் திட்டத்தைத் தேர்வுசெய்ய ஊழியர்களை ஊக்குவிக்குமா?
50%
50%