2.15 கோடி பேருக்கு அரசின் பொங்கல் பரிசு ரூ.6453.54 கோடி பட்டுவாடா: இந்திய வரலாற்றில் தனிப்பெரும் சாதனை
அமைச்சர் பெரியகருப்பன் பெருமிதம்
சென்னை, ஜன.
முதல்வர் மு.க.ஸ்டாலின் அறிவித்த பொங்கல் பரிசுத் தொகுப்பு 2.15 கோடி பயனாளர்களுக்கு ரூ.6 ஆயிரத்து 453.54 கோடி ரொக்கமாக வழங்கி சாதனை, 97% குடும்ப அட்டைதாரர்கள் பயன் அடைந்துள்ளனர் என்று கூட்டுறவுத்துறை அமைச்சர் கேஆர்.பெரியகருப்பன் பெருமிதத்துடன் தெரிவித்துள்ளார்.
இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:–
தமிழ்நாடு முழுவதும் 2,22,91,710 அரிசி பெறும் குடும்ப அட்டைதாரர்களுக்கு, இலங்கை தமிழர் மறுவாழ்வு முகாம்களில் வசிக்கும் குடும்பத்தினர்களுக்கு கைகளில் பரிசாக ரொக்கமாக ரூ.3,000 வீதம் ரொக்கம் ரூ.6687.51 கோடி, ஒரு கிலோ அரிசியாக ஒரு கிலோ சர்க்கரையாக ஒரு முழு நீளக் கரும்பாக பொங்கல் பரிசுத் தொகுப்பு ரூ.248.66 கோடி மற்றும் பொங்கல் பரிசுத் தொகுப்புடன் ரூ.668.12 கோடி செலவில் வேட்டி சேலை மொத்தம் ரூ.7604.29 கோடி செலவில் பொங்கல் பரிசுத் தொகுப்பு. எண்கள் பெரிது, ஆனால் மக்கள் மகிழ்ச்சி அதைவிட பெரிது!
கரும்பு விவசாயிகளிடமிருந்து தரம் பார்த்து கொள்முதல் செய்வதில் இத்துறை பணியாளர்கள் பொறுப்புணர்வுடன் பணிபுரிந்தார்கள்.உழைப்பின் பலன் உழைப்பாளருக்கே!
இந்த டிஜிட்டல் மயமான காலகட்டத்தில் அனைவருக்கும் பொங்கல் பரிசு தொகை ரொக்கமாக வழங்கிட கூட்டுறவுத் துறையின் சிறப்பான திட்டமிடல் மற்றும் தொய்வில்லாமலும், விரைவாக குறைந்த காலத்தில் வழங்கப்பட்டுள்ளது. இந்த நடைமுறை பிற தேசிய வங்கிகள் செய்ய முடியாததை, கூட்டுறவு வங்கி திறம்பட செய்து சாதித்துள்ளது. இந்தியாவில் எந்த வங்கியும் செய்ய முடியாததை தமிழக கூட்டுறவுத் துறை செய்து முடித்தது இதுவரை வரலாற்று சாதனை. சவால்கள் இருந்தன. காலம் குறைந்தது, ஆனால் மக்கள் மகிழ்ச்சியே முதல்வரின் மன மகிழ்ச்சி.
இத்துறை அதிகாரிகள் மற்றும் பணியாளர்கள், உரிய பணிகளை இரவு பகலாக சிரமேற்கொண்டு, தங்கு தடைகளின்றி, மக்களின் நன்மை கருதியும், அவர்களது மன மகிழ் சார்ந்து, பொங்கல் தொகுப்பு 2026 அறிவிக்கப்பட்ட ஜனவரி 4 அன்று முதல் பொங்கல் தொகுப்பு துவக்கப்பட்ட ஜனவரி 8ம் நாளன்றுக்குள் மிக மிக குறுகிய நாட்களுக்குள் பணிகளை செவ்வனவே முடித்தது, மகிழ்ச்சியும் பாராட்டுதலுக்குரியது. இவ்வாறு அமைச்சர் தெரிவித்தார்.
Related News
TODAY'S POLL
தேசிய ஓய்வூதிய முறையின் கீழ் கிடைக்கும் 'வரி சலுகைகள்' ஒருங்கிணைந்த ஓய்வூதிய திட்டத்திற்கும் பொருந்தும். இது ஒருங்கிணைந்த ஓய்வூதியத் திட்டத்தைத் தேர்வுசெய்ய ஊழியர்களை ஊக்குவிக்குமா?