4 கோயில்களில் ரூ.43 கோடியில் புதிய திட்டப்பணிகள்: ஸ்டாலின் அடிக்கல்

4 கோயில்களில் ரூ.43 கோடியில் புதிய திட்டப்பணிகள்: ஸ்டாலின் அடிக்கல்

4 கோயில்களில் ரூ.43 கோடியில் புதிய திட்டப்பணிகள்: ஸ்டாலின் அடிக்கல்

ரூ.49 கோடியில் 7 கோயில்களில் முடிவுற்ற பணிகளைத் திறந்து வைத்தார்



சென்னை, அக. 13–


முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் இன்று தலைமைச் செயலகத்தில், இந்து சமய அறநிலையத்துறை சார்பில் 43 கோடியே 20 லட்சம் ரூபாய் மதிப்பீட்டில் 4 திருக்கோயில்களில் 4 புதிய திட்டப் பணிகள் மற்றும் ஒரு உதவி ஆணையர் அலுவலக கட்டுமானப் பணிகளுக்கு அடிக்கல் நாட்டினார்.


48 கோடியே 81 லட்சம் ரூபாய் செலவில் 7 கோயில்களில் 13 முடிவுற்ற பணிகள், ஒரு இணை ஆணையர் அலுவலகம், 13 ஆய்வர் அலுவலகங்களை காணொலிக் காட்சி வாயிலாக திறந்து வைத்தார்.


மேலும், தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையத்தால் உதவி பொறியாளர் (மின்), இளநிலை வரைதொழில் அலுவலர் மற்றும் உதவியாளர் ஆகிய பணியிடங்களுக்கு தேர்வு செய்யப்பட்ட 83 நபர்களுக்கு பணி நியமன ஆணைகளை வழங்கினார்.


கோயம்புத்தூர் மாவட்டம், மருதமலை சுப்பிரமணியசுவாமி கோயிலில் 33.63 கோடி ரூபாய் மதிப்பீட்டில் திருக்கோயிலின் மலைமேல் மற்றும் அடிவாரத்தில் பக்தர்களுக்கான ஒருங்கிணைந்த அடிப்படை வசதிகளுக்கான கட்டுமானப் பணிகள்;


வேலூர் மாவட்டம், விரிஞ்சிபுரம், மார்க்கபந்தீஸ்வரர் கோயிலில் 4.38 கோடி ரூபாய் மதிப்பீட்டில் திருப்பணிகள்; நாமக்கல் மாவட்டம், குன்னமலை, வல்லீஸ்வரர் கோயிலில் 3.69 கோடி ரூபாய் மதிப்பீட்டில் கோயில் திருப்பணிகள்; 1.50 கோடி ரூபாய் மதிப்பீட்டில் பெரம்பலூரில் உதவி ஆணையர் அலுவலகம் கட்டும் பணி;


என மொத்தம் 43.20 கோடி ரூபாய் மதிப்பீட்டிலான5 புதிய திட்டப் பணிகளுக்கு முதலமைச்சர் அடிக்கல் நாட்டி, பணிகளை தொடங்கி வைத்தார்.


திருச்செந்தூர் முருகன்


கோயிலில் அன்ன தானக் கூடம்


தூத்துக்குடி மாவட்டம், திருச்செந்தூர் சுப்பிரமணியசுவாமி கோயிலில் 15.67 கோடி ரூபாய் செலவில் கட்டப்பட்டுள்ள அன்னதானக் கூடம், சலவைக் கூடம் மற்றும் புனரமைக்கப்பட்ட நாழிக்கிணறு; ஈரோடு மாவட்டம், சென்னிமலை, அருள்மிகு சுப்பிரமணியசுவாமி திருக்கோயிலில் 8.27 கோடி ரூபாய் செலவில் சீரமைக்கப்பட்ட மலைப்பாதை தார்சாலை மற்றும் புதிய பசுக்கள் காப்பகம், பக்தர்களுக்கான பேருந்து காத்திருப்பு கூடம்;


திருவண்ணாமலை மாவட்டம், திருவண்ணாமலை, அருள்மிகு அருணாசலேசுவரர் திருக்கோயிலில் 10.47 கோடி ரூபாய் செலவில் கட்டப்பட்டுள்ள கோபுரங்கள் மற்றும் விமானங்களை வண்ண விளக்குகளால் ஒளிரூட்டுதல் மற்றும் ஒருங்கிணைந்த பசுக்கள் காப்பகம்;


திண்டுக்கல் மாவட்டம், பழனி தண்டாயுதபாணி சுவாமி திருக்கோயிலில் 3.52 கோடி ரூபாய் செலவில் கட்டப்பட்டுள்ள திருக்கோயில் நிர்வாகத்தின் கீழ் இயங்கும் இரண்டு கலைக் கல்லூரிகளில் மொழி ஆய்வுக் கூடங்கள் மற்றும் அருள்மிகு இடும்பன் திருக்கோயில் முடிக் காணிக்கை மண்டபம்; 3 கோடி ரூபாய் செலவில் கட்டப்பட்டுள்ள காஞ்சிபுரம் மண்டல இணை ஆணையர் அலுவலகம்;


திருச்சிராப்பள்ளி மாவட்டம், ஸ்ரீரங்கம், அரங்கநாதசுவாமி திருக்கோயிலின் ஜவுளி ரெங்கசாமி கட்டளை தோப்பில் 2.50 கோடி ரூபாய் செலவில் கட்டப்பட்ட பசுமடம்; ஈரோடு மாவட்டம், பண்ணாரி, அருள்மிகு பண்ணாரி மாரியம்மன் திருக்கோயிலில் 1.92 கோடி ரூபாய் செலவில் கட்டப்பட்டுள்ள கிரில் அமைப்புடன் கூடிய சுற்றுசுவர்;


உத்திரமேரூர், மதுராந்தகம், வேடசந்தூர், ஆத்தூர், உசிலம்பட்டி, திருத்துறைப்பூண்டி, திருக்குவளை ஆகிய இடங்களில் 1.56 கோடி ரூபாய் செலவில் கட்டப்பட்டுள்ள 13 ஆய்வர் அலுவலகங்கள்; காஞ்சிபுரம் மாவட்டம், திருநீர்மலை, ரெங்கநாதப் பெருமாள் திருக்கோயிலில் 1.90 கோடி ரூபாய் செலவில் கட்டப்பட்டுள்ள அர்ச்சகர் மற்றும் பணியாளர் குடியிருப்பு;


என மொத்தம் 48.81 கோடி ரூபாய் செலவிலான 27 முடிவுற்ற பணிகளை முதலமைச்சர் திறந்து வைத்தார். பி.கே.சேகர்பாபு


இந்நிகழ்ச்சியில், அறநிலையத்துறை அமைச்சர் பி.கே.சேகர்பாபு, தலைமைச் செயலாளர் நா.முருகானந்தம், அறநிலையங்கள் துறை கூடுதல் தலைமைச் செயலாளர் க.மணிவாசன், அறநிலையத்துறை ஆணையர் பி.என்.ஸ்ரீதர், கூடுதல் ஆணையர் சி.பழனி, தலைமைப் பொறியாளர் பொ.பெரியசாமி, கூடுதல் ஆணையர் பொ.ஜெயராமன் ஆகியோர் கலந்து கொண்டனர்.


காணொலி காட்சி வாயிலாக கோயம்புத்தூர் மாவட்டம், மருதமலையிலிருந்து மாவட்ட கலெக்டர் பவன்குமார் கிரியப்பனவர், மாநகராட்சி மேயர் கே.ரங்கநாயகி, திருக்கோயில் தக்கார் ச. ஜெயக்குமார் மற்றும் அரசு உயர் அலுவலர்கள் கலந்து கொண்டனர்.


Related News

Follow US

TODAY'S POLL

vote-image

தேசிய ஓய்வூதிய முறையின் கீழ் கிடைக்கும் 'வரி சலுகைகள்' ஒருங்கிணைந்த ஓய்வூதிய திட்டத்திற்கும் பொருந்தும். இது ஒருங்கிணைந்த ஓய்வூதியத் திட்டத்தைத் தேர்வுசெய்ய ஊழியர்களை ஊக்குவிக்குமா?

50%
50%