***///***///***///***///***///***///***
*திருப்பதி பெருமாள் தாடையில் பச்சைக் கற்பூரம் வைப்பதன் வைபவம் காண்போம் வாருங்கள்*
***///***///***///***///***///***///***
*திருவரங்கத்தில் திருவரங்கப் பெருமானின் கைங்கர்யத்தில் தம்மை ஈடுபடுத்திக் கொண்ட ஶ்ரீராமாநுஜருக்கு, நீண்டகாலமாகவே ஒரு குறை இருந்துவந்தது*.
*வேங்கடமுடையானுக்கு ஒரு நந்தவனமும் தபோவனமும் அமைக்க முடியவில்லையே என்பது தான் அவருடைய ஆதங்கம்*.
*ராமானுஜர் ஒரு நாள், தமது சீடர்களுடன் பேசிக் கொண்டிருந்தபோது 'உங்களில் எவர் வேங்கடவனின் கைங்கர்யத்துக்கு அனுதினமும் மாலை தயாரித்துத் தரும் வேலையை எடுத்துக் கொள்ளப் போகிறீர் ?' எனக் கேட்டார்*.
*எவரும் வாய் திறக்கவில்லை*.
*குருவின் மனக்குறையைப் போக்குபவர் உங்களில் எவருமில்லையா?' என்ற மறுபடியும் ஆச்சர்யத்துடன் பார்த்தார்*.
*அப்போது ஒற்றை ஆளாக எழுந்து நின்றார் அனந்தாழ்வான்*.
*அனந்தாழ்வானை வாரி அணைத்து உச்சி முகர்ந்து திருமலைக்கு அனுப்பி வைத்தார்.*
*ஏழுமலை ஆண்டவனுக்கு 'திருமாலை சேவை' செய்யும்பேறு தனக்குக் கிடைத்த மகிழ்ச்சியோடு தனது மனைவியுடன் அவரும் திருமலைக்கு வந்து சேர்ந்தார்*.
*முன்னதாகவே அங்கே வந்து சேர்ந்திருந்த ராமாநுஜரின் தாய் மாமனான, திருமலை நம்பி அவரை இன்முகத்துடன் வரவேற்று உபசரித்தார்.*
*'அனந்தாழ்வா, உனக்கு குடிசைபோட்டுத் தருகிறேன்*.
*மேலும் நந்தவனம் அமைக்கவும் ஏற்பாடு செய்கிறேன்*.
*அனந்தாழ்வார் நந்தவனம் அமைக்க மண்வெட்டியால் வெட்டி நிலத்தைப் பண்படுத்தி பூச்செடிகளை நட்டார்.*
*அந்த நந்தவனத்துக்கு தமது குருநாதரின் திருப்பெயரே நிலைக்கும்படி 'ராமாநுஜ நந்தவனம்' என்று பெயரும் வைத்தார்*.
*இப்போதும் அந்த நந்தவனம் அதே பெயரிலேயே அழைக்கப்படுகிறது.*
*கோடைக் காலத்தின் தண்ணீர்த் தேவைக்காக குளம் வெட்டி அதில் தண்ணீரைத் தேக்க முடிவுசெய்தார்*.
*குளம் உருவாக்கும் பணியில் மனைவியும் சேர்ந்துகொண்டார்*.
*மண்ணை ஒரு புறமிருந்து மறுபக்கம் கொண்டு சென்று மனைவி கொட்டிவிட்டு வந்தார்.*
*அப்போது அவர் கருவுற்று இருந்தார்*.
*ஒரு கர்ப்பிணிப் பெண் மண் சுமந்து செல்வதைப் பார்த்த ஒரு சிறுவன், அவருக்குத் தானும் உதவுவதாகக் கூறினான்*.
*தனக்குக் கூலி எதுவும் வேண்டாம் என்று சிறுவன் கூறியும், அனந்தாழ்வான் மறுத்துவிட்டார்*.
*பெருமாளின் கைங்கர்யத்தில் தானும் தன் மனைவியும் மட்டுமே ஈடுபடவேண்டும் என்று நினைத்தார்*.
*அதனாலேயே அந்தச் சிறுவனை தன் திருப்பணியில் சேர்த்துக்கொள்ளவில்லை*.
*அவர் போகச் சொன்ன சிறுவன் போகாமல், அந்தப்பக்கத்தில் கூடையுடன் நின்றிருந்தான்*
*'தாயே, நான் மண் சுமந்தால்தானே அவர் கோபப்படுவார். அவருக்குத் தெரியாமல் உங்களுக்கு உதவுகிறேன். இந்த வளைவுக்கு இந்தப் பக்கம் நான் சுமக்கிறேன். அந்தப்பக்கம் நீங்கள் சுமந்து வாருங்கள்'' என்றான் சிறுவன்*.
*சிறுவனின் மொழியைக் கேட்ட பிறகு அவளால் மறுக்க இயலவில்லை*.
*சரி, தம்பி' என்று கூடையை மாற்றிக் கொடுத்தாள். சற்றுநேரம் இப்படியே வேலை நடந்தது*.
*திடீரென்று அனந்தாழ்வானுக்கு சந்தேகம் தோன்றியது. 'மண்ணைக் கொட்டிவிட்டு சீக்கிரம் சீக்கிரமாக வந்து விடுகிறாயே' என்று மனைவியைக் கேட்க, ''சீக்கிரமாகவே சென்று போட்டு விடுகிறேன் சிரமம் இல்லை''என்று பதில் சொல்லி சமாளித்தாள்*.
*சிறிது நேரம் சென்றதும், அனந்தாழ்வான் கரையைப் பார்க்க வந்தார்.*
*சிறுவன் கர்மசிரத்தையாக மண்ணைக் கொண்டு போய் கொட்டிக் கொண்டிருந்தான்*.
*இதனால், கோபம் தலைக்கேற கடப்பாரையால் சிறுவனின் கீழ்த்தாடையில் அடித்தார்*.
*சிறுவனின் தாடையில் இருந்து இரத்தம் கொட்டியது*.
*அந்தச் சிறுவன் ஓடிப் போய்விட்டான்*.
*மறுநாள் காலை திருமலை பெருமாளுக்கு அர்ச்சனைகள் செய்யவந்த அர்ச்சகர்கள் கதவைத் திறந்ததும் அலறினர்*.
*பெருமாளின் தாடையிலிருந்து ரத்தம் வழிந்து கொண்டிருந்தது*.
*அர்ச்சகரே பயப்பட வேண்டாம். அனந்தாழ்வாரை அழைத்து வாருங்கள்' என ஒரு அசரீரி கேட்டது.*
*உடனே அவரை அழைத்து வந்தனர்.*
*பெருமாள் தாடையில் இரத்தம் வடிவதை அனந்தாழ்வான் கண்டார்*.
*ஆனால், அவருக்கு மட்டும், தான் மண்சுமந்த கோலத்தைக் காண்பித்தார் பெருமாள்*.
*சுவாமி, என்னை மன்னித்து விடுங்கள். சிறுவனாக வந்தது தாங்கள்தான் என்று தெரியாது. சுவாமி என்னை மன்னித்தருள்க'' என்று விழுந்து வணங்கினார் அனந்தாழ்வான்*.
*அனந்தாழ்வா, நீ மலர்மாலை நேர்த்தியாகக் தொடுத்து அணிவிப்பதில் எனக்கு மகிழ்ச்சி. ஆனால், கர்ப்பிணியான உன் மனைவி மண் சுமப்பதை என்னால் பொறுத்துக் கொள்ள முடியவில்லை. என் பக்தை கஷ்டப்படுவதைக் கண்டு வேடிக்கை பார்க்க என் மனம் எப்படி இடம் கொடுக்கும்''என்று அசரீரியாகக் கேட்டார்.*
*சரி இரத்தம் வழியாமல் இருக்க என்ன செய்வது?' என்று அர்ச்சகர்கள் குழம்பினர்*.
*சுவாமியின் தாடையில் பச்சைக் கற்பூரத்தை வைத்து அழுத்துங்கள் இரத்தம் வழிவது நின்றுவிடும்' என்றார்*.
*அர்ச்சகர்களும் மூலவரின் கீழ்தாடையில் பச்சைக் கற்பூரத்தை வைக்க, இரத்தம் வழிந்தது நின்று போனது.*
*இதை நினைவுபடுத்தும் விதமாகவே திருப்பதிப் பெருமாளின் தாடையில் பச்சைக் கற்பூரம் வைக்கும் நிகழ்ச்சி இன்றளவும் தொடர்கிறது*.
*திருப்பதி திருமலை வாசனை தரிசிக்கச் செல்லும்போது, பிரதான வாசலின் வலப் புறத்தில், இந்த கடப்பாரை தொங்குவதைப் பார்க்கலாம்*
*இதுவரை பார்க்காதவர்கள் இனிமேல் செல்லும்போது கடப்பாரையை அவசியம் பாருங்கள்*
*கிருஷ்ணா உன் அழகிய திருவடிகளே சரணம்*
*ஹரே ராம ஹரே ராம ராம ராம ஹர ஹரே*
*ஹரே கிருஷ்ண ஹரே கிருஷ்ண கிருஷ்ண கிருஷ்ண ஹர ஹரே*
**
-ஸர்வம் கிருஷ்ணார் பண மஸ்து*