**1.** விதையை நம்பும் விவசாயி போல், நமது முயற்சியை நம்பி வாழ்வோம். காலம் கனியை தரும்.
**2.** மரம் காற்றில் வளையும், ஆனால் முறியாது. நமது வாழ்க்கையும் அப்படியே இருக்க வேண்டும்.
**3.** நீர் தன் இடத்தை விட்டு நகர்ந்தால் தான் ஆறு ஆகிறது. நாமும் வளர நமது வசதி மண்டலத்தை விட்டு வெளியே வர வேண்டும்.
**4.** அன்பு என்பது அளவிடுவதல்ல, அனுபவிப்பது.
**5.** மனிதர்களை மாற்ற முயற்சிக்காதே. அவர்களை அவர்களாகவே ஏற்றுக்கொள். அப்போது தான் அமைதி கிடைக்கும்.
**6.** வார்த்தைகளை விட மௌனம் சில நேரங்களில் அதிக அன்பை வெளிப்படுத்தும்.
**7.** தோல்வி என்பது முடிவல்ல, முயற்சியின் ஆரம்பம். ஒவ்வொரு தோல்வியும் ஒரு பாடம்.
**8.** வெற்றி என்பது இலக்கை அடைவதல்ல, பயணத்தை அனுபவிப்பது.
**9.** இன்று செய்யக்கூடியதை நாளைக்கு ஒத்திவைக்காதே. நேரம் திரும்ப வராது.
**10.** கடந்த காலத்தை நினைத்து வருந்தாதே. எதிர்காலத்தை நினைத்து கவலைப்படாதே. இந்த நொடியில் வாழ்.
-தயாளன் வெங்கடாசலம் ,
சென்னை