tamilnadu epaper

மழை

மழை


காலத்தே பொழியும் மழை விவசாயிக்கு

மகிழ்ச்சி.... !


எப்போதோ பொழியும்

ஆலங்கட்டி மழை...

குழந்தைகளை குதுகளிக்க வைக்கும் !


சாரல் மழை...

காதலைர்களை

ஒரு குடையின் கீழ் பயணிக்க வைக்கும் !


வாகன ஓட்டிகளை

தளர வைக்கும்...

பெரும் மழை....

குடிசை வீடுகளையும் இரக்கமின்றி இழுத்துச் செல்லும்.... !



தூறல் விட்டு பெய்யும் மழை...

சூடான தேநீர் கடைக்கு வாடிக்கையாளர்களை. கவர்ந்திழுக்கும்..


மொத்ததில்...

மழை....

இறைவன் தந்த கொடை...



எம்.பி.தினேஷ்.

கோவை