உடல் நோயற்று இருப்பது முதல் இன்பம். மனம் கவலையற்று இருப்பது இரண்டாவது இன்பம். உயிர் பிறர்க்கு உதவியாக வாழ்வது மூன்றாவது இன்பம்
*- மு.வரதராஜனார்.*
எறும்பின் சுறுசுறுப்பும், எருதின் உழைப்பும், நரியின் தந்திரமும், நாயின் விசுவாசமும், கழுதையின் பொறுமையும், காகத்தின் கூட்டுறவும், புலியின் வீரமும், புறாவின் ஒழுக்கமும், சிங்கத்தின் நடையும், யானையின் அறிவும், மானின் வாழ்வும், மக்களுக்குத் தேவை
*- கி.ஆ.பெ. விசுவநாதன்*
இரகசியத்தைக் காப்பாற்றுங்கள், அது உங்களுக்கு அடிமை. அதை வெளியிட்டுவிட்டால் அது உங்கள் எஜமான்
*- வில்ஹென்றி*
காலில் செருப்பு போட்டுக் கொண்டால் நீ முள்ளின் மீது கூட சுலமாக நடக்கலாம். ஞானமாகிய செருப்பை போட்டுக் கொண்டால் உலகம் என்னும் முள் நிறைந்த வனமெங்கும் நீ பயமின்றி பயணம் செய்யலாம்
*- இராமகிருஷ்ண பரமஹம்சர்*
கட்டுப்பாடு என்பது சுதந்திரத்திற்கு முரணானது அல்ல, சுதந்திரத்தை நியாயமான வகையில் பயன்படுத்திக் கொள்ள உதவுவதே
*அரவிந்தர்*
-ஆர். ஹரிகோபி,
புது டெல்லி