அம்மியில அரைச்சுவச்ச
அயிரமீனுக் கொழம்பு
அழகான அத்தமகளே
எனக்குன்னு பொறந்தவளே
வெட்கத்தை விட்டுத்தள்ளு
வந்துதான் கட்டிக்கொள்ளு
மொறைப்பையன் நாந்தானே
மொறச்சித்தான் பாக்காதடி
அம்சமாத்தான் இருக்கிறியே
மனசதான் மயக்குறியே
ரெட்டசடைப் பின்னலாலே
என்னைத்தான் இழுக்கிறியே
தாவணிப்போட்டச் சின்னபுள்ள
தாரமாக வருவதெப்போ
தெருவெல்லாம் மணக்குதடி
மூக்கைத்தான் துளைக்குதடி
அம்மியில அரைச்சுவச்ச
அயிரமீனு கொழம்பு
ருசித்துப் பாக்கணுமே
தட்டுலதான் தாயேன்டி
சம்பாநெல்லு சோத்துல
பிசைஞ்சு சாப்பிடணும்
ஆசையோடு தந்தாக்கா
வயிறுந்தான் ரொம்பிடுமே
ஒன்னயும் ரசிச்சிடுவேன்
சாதத்தையும் தின்னுடுவேனே
பெ.வெங்கட லட்சுமி காந்தன்.
விருதுநகர்