அரியலூர், மே 27-
அரியலூர் வட்டாட்சியர் அலுவலகத்தில், உணவுப் பொருள் வழங்கல் மற்றும் நுகர்வோர் பாதுகாப்புத் துறை சார்பில், எரிவாயு நுகர்வோர் குறைகேட்புக் கூட்டம் வியாழக்கிழமை நடைபெறுகிறது. இக்கூட்டத்தில் அனைத்து எண்ணெய் நிறுவனங்களின் பிரதிநிதிகள், எரிவாயு முகவர்கள் கலந்துகொள்ள உள்ளனர். எனவே, நுகர்வோர்கள், சமையல் எரிவாயு தொடர்பான குறைகள் இருப்பின், இந்த குறைதீர் கூட்டத்தில் கலந்துகொண்டு தங்களது புகார்களையும், ஆலோசனைகளையும் தெரிவித்து பயன்பெறலாம் என ஆட்சியர் பொ.ரத்தினசாமி தெரிவித்துள்ளார்.