திருநெல்வேலி மாவட்டம் சேரன் மகாதேவி. அருகில் உள்ளது பத்தமடை. இங்குள்ள முஸ்லிம் சமுதாயத்தை சேர்ந்தவர்கள் தலை முறை தலைமுறையாக இந்த பாய் முடைதல் தொழில் செய்து வருகின்றனர். சுமார் 150 ஆண்டுகளாக இந்த தொழில் ஈடுபட்டு வருகின்றனர்.
தாமிரபரணி நதி கரையில் உள்ள கோரை புற்கள். மற்றும் கத்தாழை கொண்டு செய்ய படுகிறது.எனவே குளிர்ச்சியாக இருக்கும். முன்பு பாய் புற்கள் நனைய வைக்க தாமிரபரணி ஆற்றை பயன் படுத்தி வந்தனர் தற்போது அவர்கள் இருப்பிடங்களில் பெரிய அளவில் தொட்டி கட்டி நீர் நிரப்பி பாய்களை ஊற வைக்கின்றனர் . திருமணத்தின் போது மணமகன். மணமகள் தேதி
ஊர் பெயரை சேர்த்து நெய்து கொடுக்கிறார்கள். இங்கு செய்ய படும் பாய்கள் உலக பிரசித்தி பெற்றவை. புவிசார் குறியீடு பெற்று உள்ளது சிறப்பு அம்சமாகும். கோரை புற்களை உலர்த்துவது காயவைப்பது. ஊறவைப்பது தரம் பிரித்தல். சாயம் இடுதல் என நீண்ட செயல் முறைகளை கொண்டது. தற்போது மின்சக்தி மூலம் செய்ய படுகிறது. இந்த பாய்கள் தரத்தை பொறுத்து 150 ரூபாய் முதல் 8000 ரூபாய் வரை விற்கப்படுகிறது. சுவாமி சிவானந்தா பிறந்த ஊர் ஆகும். 1963. ஆம் ஆண்டு இங்கிலாந்து ராணி இரண்டாம் எலிசபெத் முடசூட்டு விழாவுக்கு இங்கு இருந்து தயாரிக்க பட்ட பாய்கள் பரிசாக வழங்க பட்டது. அதன் வேலை பாட்டை பார்த்து ராணி அசந்து போய் விட்டாராம். இந்தியாவுக்கு வரும் வெளிநாட்டு தலைவர்களுக்கு இந்த பாய் பரிசாக வழங்கி கவுரவிக்க படுகிறது. சமீபத்தில் ஜப்பானுக்கு சென்றபிரதமர் இங்கு ஸ்பெஷல் ஆகசெய்ய பட்ட பாய்களை ஜப்பான் பிரதமர் மன்னர் ஆகியோருக்கு பரிசாக வழங்கினார் என்றால்அதன் தரத்தை பார்த்து கொள்ளலாம்.இங்கு செய்ய படும் பாய்களில் முரட்டு பாய். நடுத்தர பாய். நுண் நெசவு பாய் என மூன்று தரங்கள் உண்டு. தற்போது புவிசார் குறியீடுபெற்று இருப்பதுடன் கிராஃப்ட் கவுன்சில் ஆப் இந்தியா என்ற அமைப்பு மூலம் பல் வேறு சலுகைகள். நவீன முறையில் பாய் செய்ய பட்டு வருகிறது சுதந்திர போராட்ட வீரர்கள். தலைவர்கள். புகழ் பெற்ற சின்னங்கள் நடிகர்கள் இயற்க்கை ஓவியங்கள். என பலதரப்பட்ட வண்ண ஓவியங்கள் இந்த பாயில் இடம் பெற்று வருகிறது. தலை தலைமுறையாக நடை பெற்று வரும் இந்த தொழிலை பேணி பாதுகாக்க வேண்டும்.
-நடேஷ் கன்னா
கல்லிடைக்குறிச்சி