tamilnadu epaper

காலை நேர சிந்தனை

காலை நேர சிந்தனை



***///***///***///***///***///***///***

*திருப்பதி பெருமாள் தாடையில் பச்சைக் கற்பூரம் வைப்பதன் வைபவம் காண்போம் வாருங்கள்*

***///***///***///***///***///***///***


*திருவரங்கத்தில் திருவரங்கப் பெருமானின் கைங்கர்யத்தில் தம்மை ஈடுபடுத்திக் கொண்ட ஶ்ரீராமாநுஜருக்கு, நீண்டகாலமாகவே ஒரு குறை இருந்துவந்தது*.


*வேங்கடமுடையானுக்கு ஒரு நந்தவனமும் தபோவனமும் அமைக்க முடியவில்லையே என்பது தான் அவருடைய ஆதங்கம்*.


*ராமானுஜர் ஒரு நாள், தமது சீடர்களுடன் பேசிக் கொண்டிருந்தபோது 'உங்களில் எவர் வேங்கடவனின் கைங்கர்யத்துக்கு அனுதினமும் மாலை தயாரித்துத் தரும் வேலையை எடுத்துக் கொள்ளப் போகிறீர் ?' எனக் கேட்டார்*.


*எவரும் வாய் திறக்கவில்லை*.


*குருவின் மனக்குறையைப் போக்குபவர் உங்களில் எவருமில்லையா?' என்ற மறுபடியும் ஆச்சர்யத்துடன் பார்த்தார்*.


 *அப்போது ஒற்றை ஆளாக எழுந்து நின்றார் அனந்தாழ்வான்*.


 *அனந்தாழ்வானை வாரி அணைத்து உச்சி முகர்ந்து திருமலைக்கு அனுப்பி வைத்தார்.*


*ஏழுமலை ஆண்டவனுக்கு 'திருமாலை சேவை' செய்யும்பேறு தனக்குக் கிடைத்த மகிழ்ச்சியோடு தனது மனைவியுடன் அவரும் திருமலைக்கு வந்து சேர்ந்தார்*.


*முன்னதாகவே அங்கே வந்து சேர்ந்திருந்த ராமாநுஜரின் தாய் மாமனான, திருமலை நம்பி அவரை இன்முகத்துடன் வரவேற்று உபசரித்தார்.*


*'அனந்தாழ்வா, உனக்கு குடிசைபோட்டுத் தருகிறேன்*. 


*மேலும் நந்தவனம் அமைக்கவும் ஏற்பாடு செய்கிறேன்*. 


*அனந்தாழ்வார் நந்தவனம் அமைக்க மண்வெட்டியால் வெட்டி நிலத்தைப் பண்படுத்தி பூச்செடிகளை நட்டார்.* 


*அந்த நந்தவனத்துக்கு தமது குருநாதரின் திருப்பெயரே நிலைக்கும்படி 'ராமாநுஜ நந்தவனம்' என்று பெயரும் வைத்தார்*.


 *இப்போதும் அந்த நந்தவனம் அதே பெயரிலேயே அழைக்கப்படுகிறது.*


*கோடைக் காலத்தின் தண்ணீர்த் தேவைக்காக குளம் வெட்டி அதில் தண்ணீரைத் தேக்க முடிவுசெய்தார்*. 


*குளம் உருவாக்கும் பணியில் மனைவியும் சேர்ந்துகொண்டார்*.


*மண்ணை ஒரு புறமிருந்து மறுபக்கம் கொண்டு சென்று மனைவி கொட்டிவிட்டு வந்தார்.* 


*அப்போது அவர் கருவுற்று இருந்தார்*. 


*ஒரு கர்ப்பிணிப் பெண் மண் சுமந்து செல்வதைப் பார்த்த ஒரு சிறுவன், அவருக்குத் தானும் உதவுவதாகக் கூறினான்*. 


*தனக்குக் கூலி எதுவும் வேண்டாம் என்று சிறுவன் கூறியும், அனந்தாழ்வான் மறுத்துவிட்டார்*. 


*பெருமாளின் கைங்கர்யத்தில் தானும் தன் மனைவியும் மட்டுமே ஈடுபடவேண்டும் என்று நினைத்தார்*.


 *அதனாலேயே அந்தச் சிறுவனை தன் திருப்பணியில் சேர்த்துக்கொள்ளவில்லை*. 


*அவர் போகச் சொன்ன சிறுவன் போகாமல், அந்தப்பக்கத்தில் கூடையுடன் நின்றிருந்தான்*


*'தாயே, நான் மண் சுமந்தால்தானே அவர் கோபப்படுவார். அவருக்குத் தெரியாமல் உங்களுக்கு உதவுகிறேன். இந்த வளைவுக்கு இந்தப் பக்கம் நான் சுமக்கிறேன். அந்தப்பக்கம் நீங்கள் சுமந்து வாருங்கள்'' என்றான் சிறுவன்*. 


*சிறுவனின் மொழியைக் கேட்ட பிறகு அவளால் மறுக்க இயலவில்லை*.


*சரி, தம்பி' என்று கூடையை மாற்றிக் கொடுத்தாள். சற்றுநேரம் இப்படியே வேலை நடந்தது*. 


*திடீரென்று அனந்தாழ்வானுக்கு சந்தேகம் தோன்றியது. 'மண்ணைக் கொட்டிவிட்டு சீக்கிரம் சீக்கிரமாக வந்து விடுகிறாயே' என்று மனைவியைக் கேட்க, ''சீக்கிரமாகவே சென்று போட்டு விடுகிறேன் சிரமம் இல்லை''என்று பதில் சொல்லி சமாளித்தாள்*.


*சிறிது நேரம் சென்றதும், அனந்தாழ்வான் கரையைப் பார்க்க வந்தார்.* 


*சிறுவன் கர்மசிரத்தையாக மண்ணைக் கொண்டு போய் கொட்டிக் கொண்டிருந்தான்*.  


*இதனால், கோபம் தலைக்கேற கடப்பாரையால் சிறுவனின் கீழ்த்தாடையில் அடித்தார்*. 


*சிறுவனின் தாடையில் இருந்து இரத்தம் கொட்டியது*.


*அந்தச் சிறுவன் ஓடிப் போய்விட்டான்*.


*மறுநாள் காலை திருமலை பெருமாளுக்கு அர்ச்சனைகள் செய்யவந்த அர்ச்சகர்கள் கதவைத் திறந்ததும் அலறினர்*.


*பெருமாளின் தாடையிலிருந்து ரத்தம் வழிந்து கொண்டிருந்தது*. 


*அர்ச்சகரே பயப்பட வேண்டாம். அனந்தாழ்வாரை அழைத்து வாருங்கள்' என ஒரு அசரீரி கேட்டது.* 


*உடனே அவரை அழைத்து வந்தனர்.*


 *பெருமாள் தாடையில் இரத்தம் வடிவதை அனந்தாழ்வான் கண்டார்*. 


*ஆனால், அவருக்கு மட்டும், தான் மண்சுமந்த கோலத்தைக் காண்பித்தார் பெருமாள்*.


*சுவாமி, என்னை மன்னித்து விடுங்கள். சிறுவனாக வந்தது தாங்கள்தான் என்று தெரியாது. சுவாமி என்னை மன்னித்தருள்க'' என்று விழுந்து வணங்கினார் அனந்தாழ்வான்*.


*அனந்தாழ்வா, நீ மலர்மாலை நேர்த்தியாகக் தொடுத்து அணிவிப்பதில் எனக்கு மகிழ்ச்சி. ஆனால், கர்ப்பிணியான உன் மனைவி மண் சுமப்பதை என்னால் பொறுத்துக் கொள்ள முடியவில்லை. என் பக்தை கஷ்டப்படுவதைக் கண்டு வேடிக்கை பார்க்க என் மனம் எப்படி இடம் கொடுக்கும்''என்று அசரீரியாகக் கேட்டார்.*


*சரி இரத்தம் வழியாமல் இருக்க என்ன செய்வது?' என்று அர்ச்சகர்கள் குழம்பினர்*.


*சுவாமியின் தாடையில் பச்சைக் கற்பூரத்தை வைத்து அழுத்துங்கள் இரத்தம் வழிவது நின்றுவிடும்' என்றார்*.


 *அர்ச்சகர்களும் மூலவரின் கீழ்தாடையில் பச்சைக் கற்பூரத்தை வைக்க, இரத்தம் வழிந்தது நின்று போனது.*


*இதை நினைவுபடுத்தும் விதமாகவே திருப்பதிப் பெருமாளின் தாடையில் பச்சைக் கற்பூரம் வைக்கும் நிகழ்ச்சி இன்றளவும் தொடர்கிறது*.


*திருப்பதி திருமலை வாசனை தரிசிக்கச் செல்லும்போது, பிரதான வாசலின் வலப் புறத்தில், இந்த கடப்பாரை தொங்குவதைப் பார்க்கலாம்* 


*இதுவரை பார்க்காதவர்கள் இனிமேல் செல்லும்போது கடப்பாரையை அவசியம் பாருங்கள்*


*கிருஷ்ணா உன் அழகிய திருவடிகளே சரணம்*


*ஹரே ராம ஹரே ராம ராம ராம ஹர ஹரே*


*ஹரே கிருஷ்ண ஹரே கிருஷ்ண கிருஷ்ண கிருஷ்ண ஹர ஹரே*


**

-ஸர்வம் கிருஷ்ணார் பண மஸ்து*