tamilnadu epaper

தண்ணீரே உயிர்

தண்ணீரே உயிர்


உலகின் உயிர்களுக்கு

 அடிப்படைத் தேவை தான்

 தண்ணீர் தண்ணீர் ஆகும் நீர்

 இல்லையேல் உயிர் இல்லை


 உயிரினம் படிப்படியாய்

 அழிந்து ஒழிந்து விடும்

 நீரின்றி அமையாது உலகு

 என்பது வள்ளுவன் வாக்கு


 பஞ்சபூதங்கள் எல்லாம்

 ஒன்றுடன் ஒன்று பின்னி பிணைந்து இணைந்து உள்ளது இது இயற்கையின் தகமைவு


 உயிரினம் வளராது வாழாது தண்ணீர் தேவை தேவையே

 நீரில்லையேல் உலகம் இல்லை உலகு பாலை வனம் ஆகும்.


  மானிடனே கொஞ்சம் நில் கவனி சிந்தி செயல்படு

 மரங்களை அழித்து மழையை இழந்தோம் உயிரினம் நிர்வாணி


 இயற்கையை பாதுகாப்போம்

 நம்மை அது வாழவைக்கும் தாவரங்களை வளர்ப்போம் நாம் வாழ்வாங்கு வாழலாம் வாரீர்.




-பேராசிரியர் முனைவர் வேலாயுதம் பெரியசாமி 

சேலம்