நெருப்பிலே சமைப்பதை நிறுத்தினால் உலகிலே
நிறையவே வெப்பம் குறையும் !
நெருப்புக்கு இணையாக சூரிய வெப்பத்தில் அடுப்புகள் ஏற்ற வேண்டும் !
இருப்பிடம் பொதுவிடம் கழிவுகள் அனைத்தையும்
நீரிலே கலந்தி டாமல்,
புதைக்கவும் சுழற்சியால் புதுப்பிக்கும் அனைத்தையும்
பொறுப்புடன் செய்ய வேண்டும் !
விருப்புடன் அனைவரும் பசுநெய்யில் தினந்தோறும்
விளக்குகள் ஏற்ற வேண்டும் !
வேம்பு எலுமிச்சை புங்கன் துளசியை
வீடெல்லாம் வளர்க்க வேண்டும் !
பொறுப்புடன் இயற்கையின் கொடைகளைப் போற்றுதல் . புவிவெப்பம் குறைக்கும் மார்க்கம்!
புலங்களின் இச்சையை சமநிலை படுத்துவோம்
பூமியைக் குளிரச் செய்வோம்!!
-குடந்தை பரிபூரணன்.