tamilnadu epaper

புத்தக தினம்

புத்தக தினம்


புத்தக தினம் இன்று,


புதிதாக ஒரு புத்தகம் 


படிக்கத்தான் விரும்பினேன்; நான்.


கடையில் போய் வாங்க வர


எண்ணம் கொண்டு 


புத்தக அடுக்கை நோக்க; 


பிரிக்காத புத்தகக் கட்டுகள்.‌.பல.


புரட்டாத புது புத்தகங்கள்... பல.


புதினங்கள்,


சிறுகதைகள்,


குறுங் கதைகள்,


கட்டுரைத் தொகுப்புகள்,


கவிதைகள்,


போதகங்கள்,


புராணங்கள்,


பாட புத்தகங்கள்,


என் மனதை ஏதோ நெருட,


என் காலைக் கட்டிப்போட;


என் கைகள் 

அவற்றில் ஒன்றை எடுக்க;


இது வரைக்கும் நான் படிக்காத,


 இதிகாச காவியம்:


ஜெயமோகனின்,


' வெண்முரசு'


படிக்கத் துவங்கி விட்டேன்;


அங்கெங்கும் நகராமல்


-சசிகலா விஸ்வநாதன்