tamilnadu epaper

புத்தகம்

புத்தகம்


புத்தகம் வாசிப்பதும்

நேசிப்பதும் நன்றாம்


நன்றாம் கற்றதை

எடுத்துச் சொல்லுதல்


சொல்லுதல் யாவர்க்கும் 

புரிதல் சிறப்பு 


சிறப்பு செய்யும் 

நூல்களின் உயிர்ப்பு 


உயிர்ப்பும் உணர்வும்

உண்மை உரைக்கும் 


உரைக்கும் எழுத்தும்

உறவினை வளர்க்கும் 


வளர்க்கும் தன்மை

கேள்வியின் ஞானம்


ஞானம் தந்திடும் 

படிக்கும் புத்தகம்.


-தாராமதன்