tamilnadu epaper

விமான எரிபொருள் டேங்கர் லாரி உரிமையாளர்கள் வேலைநிறுத்தம்

விமான எரிபொருள் டேங்கர் லாரி  உரிமையாளர்கள் வேலைநிறுத்தம்

சென்னை, மே 27-

சென்னை தண்டையார்பேட்டையில் உள்ள பாரத் பெட்ரோலியம் நிறுவனத்தில் இருந்து தினந்தோறும் டேங்கர் லாரிகளில் விமானங்களுக்கு பெட்ரோல் எடுத்துச் செல்லப்படுகிறது. இந்நிலையில், கடந்த 5 வருடங்க ளுக்கு முன்பு போடப்பட்ட ஒப்பந்தத்தின் படி வழங்கப்பட்டு வந்த வாடகை தற்போது குறைத்து வழங்கப்படுவதாகவும், இதை உயர்த்தி வழங்க வேண்டும் எனவும் டேங்கர் லாரி உரிமையாளர்கள், பாரத் பெட் ரோலியம் நிறுவன நிர்வாகத்திடம் கோரிக்கை வைத்திருந்தனர். வாடகையை நிர்வாகம் உயர்த்தி வழங்கவில்லை. இதனால் தண்டையார்பேட்டை பாரத் பெட்ரோலிய நிறுவனத்தில் இருந்து விமான நிலையத்திற்கு கொண்டு செல்லும் பெட்ரோல் டேங்கர் லாரிகளின் உரிமை யாளர்கள் மே 27 முதல் வேலை நிறுத்தப் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். டேங்கர் லாரி உரிமையாளர்கள் வேலை நிறுத்த போராட்டத்தால் பெட்ரோல், டீசல் தட்டுப்பாடு ஏற்படும் அபாயம் ஏற்பட்டு உள்ளது.