அன்புமொழி

அன்புமொழி


அன்புமொழி கேட்டுவிட்டால்

ஆறுதல்தான் அடைந்திடுவோம்

அன்பொன்றே நிலையாகும்

அருளொன்றே கலையாகும்!

அன்பாலே அனைத்தையுமே

அடைந்திடலாம் எப்போதும்

அன்பேதான் வித்தாகும்

அழகான வாழ்க்கைக்கு!


அன்பாலே துன்பநிலை

அடுத்தநொடி மாறிவிடும்

அன்பைப்போல் ஒருசக்தி

யாருக்கும் அமைந்திடுக!

அன்பேதான் கடவுளென்றே

ஆன்றோரே உரைத்தனரே

அன்பேதான் வலிமையாகும்

அன்புக்கே ஈடில்லை!


*முனைவர்*

*இராம.வேதநாயகம்*

திருவண்ணாமலை.

Related News

Follow US

TODAY'S POLL

vote-image

தேசிய ஓய்வூதிய முறையின் கீழ் கிடைக்கும் 'வரி சலுகைகள்' ஒருங்கிணைந்த ஓய்வூதிய திட்டத்திற்கும் பொருந்தும். இது ஒருங்கிணைந்த ஓய்வூதியத் திட்டத்தைத் தேர்வுசெய்ய ஊழியர்களை ஊக்குவிக்குமா?

50%
50%