அலங்காநல்லூர் ஜல்லிக்கட்டு போராட்ட வழக்கில் இருந்து 56 பேர் விடுதலை
Jan 31 2026
25
மதுரை: அலங்காநல்லூர் ஜல்லிக்கட்டு போராட்ட வழக்கிலிருந்து 56 பேரை விடுதலை செய்து மதுரை மாவட்ட நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது.
அலங்காநல்லூரில் நடைபெற்ற போராட்டம் தொடர்பாக சையத் உமர் முக்தர், சகாய ஆன்றோ கிளைட்டன், கம்பூர் செல்வராஜ், யுக, கீதா, ரெங்கராஜன், தமிழரசன், வினோத்ராஜ், முகிலன் உள்பட 64 பேர் மீது போலீஸார் வழக்குப் பதிவு செய்தனர். பின்னர் இந்த வழக்கு சிபிசிஐடி-க்கு மாற்றப்பட்டது.
ஜல்லிக்கட்டு போராட்டம் தொடர்பாக மாநிலம் முழுவதும் பல்வேறு வழக்குகள் பதிவு செய்யப்பட்டன. இந்த வழக்குகளை ரத்து செய்யக்கோரி தமிழக அரசுக்கு கோரிக்கை வைக்கப்பட்டது. இந்த கோரிக்கையை ஏற்று ஜல்லிக்கட்டு போராட்ட வழக்குகளை தமிழக அரசு திரும்ப பெற்றது. இருப்பினும் சிபிசிஐடி பதிவு செய்த வழக்கு திரும்பப் பெறப்படவில்லை.
இந்த வழக்கு மதுரை 5-வது கூடுதல் மாவட்ட மற்றும் அமர்வு நீதிமன்றத்தில் 2018 முதல் விசாரிக்கப்பட்டு வந்தது. விசாரணை நிலுவையில் இருந்தபோது 3 பேர் உயிரிழந்தனர். இந்த வழக்கில் தொடர்புடைய 5 பேர் மீதான வழக்கு தனியே பிரிக்கப்பட்டது. இந்நிலையில் எஞ்சிய 56 பேரையும் விடுதலை செய்து நீதிபதி ஆர்.ஜோசப்ஜாய் தீர்ப்பளித்தார்.
Related News
TODAY'S POLL
தேசிய ஓய்வூதிய முறையின் கீழ் கிடைக்கும் 'வரி சலுகைகள்' ஒருங்கிணைந்த ஓய்வூதிய திட்டத்திற்கும் பொருந்தும். இது ஒருங்கிணைந்த ஓய்வூதியத் திட்டத்தைத் தேர்வுசெய்ய ஊழியர்களை ஊக்குவிக்குமா?