அலங்காநல்லூர் ஜல்லிக்கட்டு போராட்ட வழக்கில் இருந்து 56 பேர் விடுதலை

அலங்காநல்லூர் ஜல்லிக்கட்டு போராட்ட வழக்கில் இருந்து 56 பேர் விடுதலை



மதுரை: அலங்​காநல்​லூர் ஜல்​லிக்​கட்டு போராட்ட வழக்​கி​லிருந்து 56 பேரை விடு​தலை செய்து மதுரை மாவட்ட நீதி​மன்​றம் தீர்ப்​பளித்​துள்​ளது. 

அலங்​காநல்​லூரில் நடை​பெற்ற போராட்​டம் தொடர்​பாக சையத் உமர் முக்​தர், சகாய ஆன்றோ கிளைட்​டன், கம்​பூர் செல்​வ​ராஜ், யுக, கீதா, ரெங்​க​ராஜன், தமிழரசன், வினோத்​ராஜ், முகிலன் உள்பட 64 பேர் மீது போலீ​ஸார் வழக்​குப் பதிவு செய்​தனர். பின்​னர் இந்த வழக்கு சிபிசிஐடி-க்கு மாற்​றப்​பட்​டது.


ஜல்​லிக்​கட்டு போராட்​டம் தொடர்​பாக மாநிலம் முழு​வதும் பல்​வேறு வழக்​கு​கள் பதிவு செய்​யப்​பட்​டன. இந்த வழக்​கு​களை ரத்து செய்​யக்​கோரி தமிழக அரசுக்கு கோரிக்கை வைக்​கப்​பட்​டது. இந்த கோரிக்​கையை ஏற்று ஜல்​லிக்​கட்டு போராட்ட வழக்​கு​களை தமிழக அரசு திரும்ப பெற்​றது. இருப்​பினும் சிபிசிஐடி பதிவு செய்த வழக்கு திரும்​பப் பெறப்​பட​வில்​லை.


இந்த வழக்கு மதுரை 5-வது கூடுதல் மாவட்​ட மற்றும் அமர்வு நீதி​மன்​றத்​தில் 2018 முதல் விசா​ரிக்​கப்​பட்டு வந்​தது. விசா​ரணை நிலு​வை​யில் இருந்​த​போது 3 பேர் உயி​ரிழந்​தனர். இந்த வழக்​கில் தொடர்​புடைய 5 பேர் மீதான வழக்கு தனியே பிரிக்​கப்​பட்​டது. இந்​நிலை​யில் எஞ்​சிய 56 பேரை​யும் விடு​தலை செய்து நீதிபதி ஆர்​.ஜோசப்​ஜாய் தீர்ப்​பளித்​தார்.


Related News

Follow US

TODAY'S POLL

vote-image

தேசிய ஓய்வூதிய முறையின் கீழ் கிடைக்கும் 'வரி சலுகைகள்' ஒருங்கிணைந்த ஓய்வூதிய திட்டத்திற்கும் பொருந்தும். இது ஒருங்கிணைந்த ஓய்வூதியத் திட்டத்தைத் தேர்வுசெய்ய ஊழியர்களை ஊக்குவிக்குமா?

50%
50%