ஆசிய கோப்பை இறுதிக்கு முன்னேறிய இந்தியா: வங்கதேசத்தை 41 ரன்களில் வீழ்த்தியது!
Sep 26 2025
40

துபாய்: நடப்பு ஆசிய கோப்பை தொடரில் இறுதிப் போட்டிக்கு இந்திய கிரிக்கெட் அணி முன்னேறி உள்ளது. இந்த தொடரின் சூப்பர் 4 சுற்றில் வங்கதேசத்தை 41 ரன்களில் வீழ்த்தியது இந்தியா.
துபாயில் நடைபெற்ற இந்தப் போட்டியில் 169 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்கை வங்கதேசம் விரட்டியது. அந்த அணியின்
பேட்ஸ்மேன்கள் சீரான இடைவெளியில் விக்கெட்டுகளை இழந்தனர். அந்த அணிக்கு ஆறுதலாக அமைந்தது சைப் ஹசன் ஆட்டம்தான். அவர் 51 பந்துகளில் 69 ரன்கள் எடுத்தார். பர்வேஸ், 21 ரன்கள் எடுத்தார்.
அவர்களை தவிர மற்ற அனைத்து வங்கதேச பேட்ஸ்மேன்களும் ஒற்றை இலக்க ரன்களில் ஆட்டமிழந்தனர். 19.3 ஓவர்களில் 127 ரன்களுக்கு வங்கதேசம் ஆல் அவுட் ஆனது. இந்தியா தரப்பில் குல்தீப் 3, வருண் மற்றும் பும்ரா தலா 2, அக்சர் மற்றும் திலக் தலா 1 விக்கெட்டும் கைப்பற்றினர். இந்த வெற்றி மூலம் இந்திய அணி இறுதிப் போட்டிக்கு முன்னேறி உள்ளது.
முன்னதாக, முதல் இன்னிங்ஸில் இந்திய அணிக்காக அபிஷேக் சர்மா மற்றும் ஷுப்மன் கில் இணைந்து இன்னிங்ஸை தொடங்கினர். முதல் விக்கெட்டுக்கு அவர்கள் இருவரும் இணைந்து 77 ரன்கள் பார்ட்னர்ஷிப் அமைத்தனர். ரிஷாத் பந்தில் பெரிய ஷாட் ஆட முயன்று கேட்ச் கொடுத்து கில் வெளியேறினார்.
மூன்றாவது பேட்ஸ்மேனாக களம் கண்ட ஷிவம் துபே, 2 ரன்களில் ஆட்டமிழந்தார். அவரது விக்கெட்டையும் ரிஷாத் கைப்பற்றினார். 37 பந்துகளில் 75 ரன்கள் எடுத்த அபிஷேக் சர்மா, ரன் அவுட் ஆனார். அது இந்த ஆட்டத்தில் வங்கதேச அணிக்கு திருப்புமுனையாக அமைந்தது.
அதன் பின்னர் கேப்டன் சூர்யகுமார் யாதவ் 11 பந்துகளில் 5 ரன்கள் எடுத்து அவுட் ஆனார். தொடர்ந்து திலக் வர்மாவும் 5 ரன்களில் ஆட்டமிழந்தார்.
6-விக்கெட்டுக்கு இணைந்த ஹர்திக் பாண்டியாவும், அக்சர் படேலும் 39 ரன்கள் பார்ட்னர்ஷிப் அமைத்தனர். முதல் இன்னிங்ஸின் கடைசி பந்தில் ஹர்திக் ஆட்டமிழந்தார். அவர் 29 பந்துகளில் 38 ரன்கள் எடுத்திருந்தார். அக்சர் 10 ரன்கள் எடுத்தார். 20 ஓவர்களில் இந்திய அணி 6 விக்கெட்டுகள் இழப்புக்கு 168 ரன்கள் எடுத்தது.
Related News
Popular News
TODAY'S POLL

தேசிய ஓய்வூதிய முறையின் கீழ் கிடைக்கும் 'வரி சலுகைகள்' ஒருங்கிணைந்த ஓய்வூதிய திட்டத்திற்கும் பொருந்தும். இது ஒருங்கிணைந்த ஓய்வூதியத் திட்டத்தைத் தேர்வுசெய்ய ஊழியர்களை ஊக்குவிக்குமா?