திருட்டை பிடித்த பிறகுதான் பூட்டுப்போட ஞாபகம் வந்ததா ஞானேஷ் ஜி? - ராகுல் கேள்வி
Sep 26 2025
32

வாக்காளர் பட்டியலில் மாற்றத்திற்கான விண்ணப்பம் சரிபார்த்ததில் 24 விண்ணப்பம்தான் உண்மையானது எனத் தெரியவந்தது.
சிஐடி-க்கு ஆதாரங்களை எப்போது வழங்கப் போகிறீர்கள் என்று சொல்லுங்கள்?
கர்நாடக மாநிலத்தில் உள்ள ஆலந்த் தொகுதியில், 6018 வாக்காளர்கள் பெயரை போலியாக விண்ணப்பம் செய்து, நீக்க முயற்சி மேற்கொள்ளப்பட்டது என ராகுல் காந்தி அதற்கான ஆதாரங்களுடன் வெளியிட்டார்.
தலைமை தேர்தல் ஆணையர் ஞானேஷ் குமார் இந்த குற்றத்துக்கு உடந்தை எனவும் ராகுல் கூறினார். ஆனால், தேர்தல் ஆணையம் அவரது குற்றச்சாட்டை மறுத்து வந்தது.
வாக்காளர் பட்டியலில் மாற்றத்திற்கான விண்ணப்பம் சரிபார்த்ததில் 24 விண்ணப்பம்தான் உண்மையானது எனத் தெரியவந்தது.
இந்நிலையில் ஆன்லைன் மூலம் வாக்காளர் பட்டியலில் பெயர் சேர்க்க, நீக்க வேண்டுமென்றால் ஆதார் கார்டு உடன் இணைக்கப்பட்டுள்ள செல்போன் நம்பர் தேவை என்ற முறையை தேர்தல் ஆணையம் நடைமுறைப் படுத்தியுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
இதுகுறித்து ராகுல் காந்தி தனது எக்ஸ் பதிவில், "ஞானேஷ் ஜி, திருட்டு பிடிபட்ட பிறகுதான் உங்களுக்குப் பூட்டுப் போட வேண்டும் என்று நினைவிருக்கிறதா? இப்போது திருடர்களையும் நாங்கள் பிடிப்போம்.
அதனால், சிஐடி-க்கு ஆதாரங்களை எப்போது வழங்கப் போகிறீர்கள் என்று சொல்லுங்கள்?" என்று பதிவிட்டுள்ளார்.
வாக்கு திருட்டு தொடர்பாக கர்நாடக சிஐடி (CID) வழக்குப் பதிவு செய்து விசாரித்து வருகிறது.
இந்த விவகாரத்தில் ஈடுபட்டவர்களின் விவரங்களைத் தேர்தல் ஆணையம் பகிர்ந்து கொள்ள வேண்டும் என்றும், இதன் மூலம் சிஐடி விசாரணையைத் தொடர முடியும் என்றும் ராகுல் காந்தி கேட்டுக்கொண்டுள்ளார்.
எனினும், இ-சைன் சரிபார்ப்பு முறையை அறிமுகப்படுத்தியது ஆலந்தத் தொகுதி சர்ச்சையால் அல்ல என்று தேர்தல் ஆணைய அதிகாரிகள் தெரிவித்து வருகின்றனர்.
Related News
Popular News
TODAY'S POLL

தேசிய ஓய்வூதிய முறையின் கீழ் கிடைக்கும் 'வரி சலுகைகள்' ஒருங்கிணைந்த ஓய்வூதிய திட்டத்திற்கும் பொருந்தும். இது ஒருங்கிணைந்த ஓய்வூதியத் திட்டத்தைத் தேர்வுசெய்ய ஊழியர்களை ஊக்குவிக்குமா?