.... திருவண்ணாமலை மாவட்டம் 22.07.2025 கீழ்பென்னாத்தூர் ஸ்ரீ மீனாட்சி சுந்தரேஸ்வரர் ஆலயத்தில் நந்தி பெருமானுக்கு ஆடி மாத பிரதோஷத்தை முன்னிட்டு வாசனை திரவியங்கள் பால், தயிர்,பன்னீர், வெட்டிவேர், விபூதி,சந்தனம், இளநீர்,தேன், பஞ்சாமிர்தம் அனைத்து வகையான வாசனை திரவியங்களால் அபிஷேகம், அலங்காரங்கள் பல வண்ண மலர்களால் அர்ச்சனை செய்து வண்ணமலர் மாலைகளால் அலங்கரித்து மங்கள வாத்தியங்கள் ஒலிக்க சங்குகள் முழங்க மந்திரங்கள், பாட்டுக்கள் பாடி பிரசாத நெய்வேத்தியங்களுடன் தீபாரதனை நடைபெற்றது. உற்சவர் மூன்று முறை ஆலயம் சுற்றி வந்து ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு நந்திகேச பெருமானை வேண்டி அருள் பெற்றனர் பிரசாதங்களும் வழங்கப்பட்டன. தமிழ்நாடு இ பேப்பர் செய்தியாளர் நிர்மலா ஸ்ரீதர் திருவண்ணாமலை
Related News
Popular News
TODAY'S POLL
தேசிய ஓய்வூதிய முறையின் கீழ் கிடைக்கும் 'வரி சலுகைகள்' ஒருங்கிணைந்த ஓய்வூதிய திட்டத்திற்கும் பொருந்தும். இது ஒருங்கிணைந்த ஓய்வூதியத் திட்டத்தைத் தேர்வுசெய்ய ஊழியர்களை ஊக்குவிக்குமா?