ஆந்திராவில் ஒரே பிரசவத்தில் 3 குழந்தைகளை பெற்றெடுத்த இளம்பெண்

ஆந்திராவில் ஒரே பிரசவத்தில் 3 குழந்தைகளை பெற்றெடுத்த இளம்பெண்


 

நகரி,


ஆந்திராவில் ஒரு தம்பதி ஏற்கனவே 4 பெண் குழந்தைகள் இருக்கும் நிலையில், தங்களுக்கு ஒரு ஆண் குழந்தை வேண்டும் என்ற ஆசையில் இருந்தனர். ஆனால் அவர்களுக்கு ஒரே பிரசவத்தில் 3 குழந்தைகள் பிறந்துள்ளன.


அதுபற்றிய விவரம் வருமாறு:-


ஆந்திர மாநிலம் அனந்தபுரம் மாவட்டம் பிரம்மசமுத்திரம் நஞ்சாபுரம் கிராமத்தை சேர்ந்தவர் ரமேஷ். இவரது மனைவி கவிதா. இவர்களுக்கு 4 பெண் குழந்தைகள் உள்ளனர். மீண்டும் கவிதா கர்ப்பமுற்றார்.


அவரை ஆஸ்பத்திரியில் அனுமதித்தனர். அப்போது அவருக்கு 3 குழந்தைகள் பிறந்தன. இதில் 2 பெண் குழந்தைகளும், ஒரு ஆண் குழந்தையும் அடங்கும். 3 குழந்தைகளும் நலமாக உள்ளன.


Related News

Follow US

TODAY'S POLL

vote-image

தேசிய ஓய்வூதிய முறையின் கீழ் கிடைக்கும் 'வரி சலுகைகள்' ஒருங்கிணைந்த ஓய்வூதிய திட்டத்திற்கும் பொருந்தும். இது ஒருங்கிணைந்த ஓய்வூதியத் திட்டத்தைத் தேர்வுசெய்ய ஊழியர்களை ஊக்குவிக்குமா?

50%
50%