ஆழி

ஆழி

 


சோழி போட்டு பார்க்கும் 

கிழவியிடம் 

வருங்கால 

நம் காதல் வாழ்க்கை பற்றி கேட்டேன் 

நீரின் பெருவடிவம் 

ஆழி 

ஆழி இல்லையேல் 

ஓடும் நதிகளுக்கு 

போக்கிடம் ஏது ??

நீரின்றி மட்டுமல்ல 

நீயின்றியும் 

என் எதிர்காலம் இல்லையடி ?!

சிவனில்லையேல் சக்தியேது ?

சக்தியில்லையேல் சிவனேது ?

நீயின்றியும் நானில்லை என்றாள் !

மொத்தத்தில் 

என்னுள் நீயே ஆக்கிரமித்திருக்கிறாய்

செல்லங்கள் கொஞ்சவும், 

சண்டைகள் போடவும் 

உன்னை விட்டால் 

நாதியற்ற அநாதையடி 

ஒரு சொல் சொன்னால் கூட 

உனக்காக 

செத்து போவேன் -ஆனால் 

இப்பிரபஞ்சத்தில் வாழும் 

ஒவ்வொரு நொடியும் 

உனக்காகவே 

அணு அணுவாய் வாழ்ந்து 

இரசிக்க வேண்டும் .

எல்லா நீர் வடிவங்களும் 

ஆழியில் அடங்குவது போல 

உன் பெரும் சுழியில் 

நானடங்கி 

மரணம் வரை 

தொடர வேண்டும் .

என்ன இந்த வாழ்க்கை 

இவ்வளவு சீக்கிரத்தில் 

முடிந்து விட்டதே என 

உன்னால் நானுணர வேண்டும் 

என் பெருங்கடலே 

பெண்மையின் சொரூபமே 

என் வன்மையில் 

உன் மென்மை உணர வேண்டும் 

உன் மென்மையில் 

என் வன்மை நீனுணர வேண்டும் 

நம் பரிமாற்றங்கள் 

தாய்மை வரத்தை 

உனக்கு பரிசாய் தருமடி 

உங்கள் அன்பை சொல்லிக்கொண்டே இருந்தால் 

எனக்கும் இளமை வரும் 

இந்த பொல்லாத காதலும் துளிர்க்குமென 

சோழி போட்ட கிழவி

 சிரித்து கொண்டும் ,

சிணுங்கி கொண்டும்

நடையை கட்டினாள் .


நௌஷாத் கான் .லி

Related News

Follow US

TODAY'S POLL

vote-image

தேசிய ஓய்வூதிய முறையின் கீழ் கிடைக்கும் 'வரி சலுகைகள்' ஒருங்கிணைந்த ஓய்வூதிய திட்டத்திற்கும் பொருந்தும். இது ஒருங்கிணைந்த ஓய்வூதியத் திட்டத்தைத் தேர்வுசெய்ய ஊழியர்களை ஊக்குவிக்குமா?

50%
50%