இந்தியாவுக்கு முழு சுதந்திரம் உள்ளது’ - கச்சா எண்ணெய் விவகாரத்தில் ரஷ்யா கருத்து

இந்தியாவுக்கு முழு சுதந்திரம் உள்ளது’ - கச்சா எண்ணெய் விவகாரத்தில் ரஷ்யா கருத்து


மாஸ்கோ: “உலக நாடுகளில் எங்கிருந்து வேண்டுமானாலும் தங்களுக்கு தேவையான கச்சா எண்ணெயை இந்தியா பெறுவதற்கான முழு சுதந்திரம் உள்ளது” என ரஷ்யா தெரிவித்துள்ளது.


இந்தியா மற்றும் அமெரிக்கா இடையே வர்த்தக ஒப்பந்தம் ஏற்பட்டுள்ளது. இந்நிலையில், இந்தியா இனி ரஷ்ய கச்சா எண்ணெயை வாங்காது என அமெரிக்க தரப்பு தெரிவித்து வருகிறது. இத்தகைய சூழலில் இந்த விவகாரம் தொடர்பாக புதன்கிழமை அன்று ரஷ்ய செய்தித் தொடர்பாளர் டிமிட்ரி பெஸ்கோவ் கூறியதாவது:


“இந்தியாவுக்கு தேவையான கச்சா எண்ணெய் மற்றும் பெட்ரோலியம் பொருட்களை ரஷ்யா மட்டுமே தனியொரு தேசமாக விநியோகிக்கவில்லை. இதை ரஷ்யா உட்பட உலக அளவில் எண்ணெய் வளம் மிக்க சர்வதேச நாடுகள் நன்கு அறியும்.


ஏனெனில் இந்தியா பல்வேறு நாடுகளில் இருந்து கச்சா எண்ணெய் வாங்கி வருகிறது. அதனால் இதில் புதிது எதுவும் இல்லை என நாங்கள் பார்க்கிறோம். உலக நாடுகளில் எங்கிருந்து வேண்டுமானாலும் தங்களுக்கு தேவையான கச்சா எண்ணெயை இந்தியா பெறுவதற்கான முழு சுதந்திரம் உள்ளது” என அவர் தெரிவித்தார்.


Related News

Follow US

TODAY'S POLL

vote-image

தேசிய ஓய்வூதிய முறையின் கீழ் கிடைக்கும் 'வரி சலுகைகள்' ஒருங்கிணைந்த ஓய்வூதிய திட்டத்திற்கும் பொருந்தும். இது ஒருங்கிணைந்த ஓய்வூதியத் திட்டத்தைத் தேர்வுசெய்ய ஊழியர்களை ஊக்குவிக்குமா?

50%
50%