*வீரம் என்பது*
பயப்படாத மாதிரி
நடிக்கிறது;
*புத்திசாலி என்பது*
அடுத்தவனை
முட்டாளாக்குவது;
*சந்தோஷம் என்பது*
பணம் இருப்பதாய்
காட்டிக் கொள்வது;
*அமைதி என்பது*
அடுத்து என்ன பேசனும்னு
தெரியாமலிருப்பது;
*குற்றம் என்பது*
அடுத்தவர் செய்யும்போது
தெரிவது;
*தன்னிலை விளக்கம் என்பது*
தன் தவறுக்கு சால்ஜாப்பு
சொல்வது;
*பொதுசனம் என்பது*
கூடி நின்று வேடிக்கை
பார்ப்பது;
*தானம் என்பது*
வீட்டில் உள்ள பழையதை
கொடுப்பது;
*பணிவு என்பது*
மரியாதை இருப்பதுபோல்
நடிப்பது;
*காதல் என்பது*
இரண்டு பேரும் சேர்ந்து
பொய் சொல்வது;
*கல்வி என்பது*
காப்பி பேஸ்ட் செய்வது;
*நேர்மை என்பது*
நூறை திருப்பிக் கொடுத்து
இருநூறாய் கேட்பது;
*நல்லவன் என்பது*
கஷ்டப்பட்டு நடிப்பது;
*எதார்த்தம் என்பது*
நெல்லை விற்றுவிட்டு
அரிசி வாங்கிக் கொள்வது;
*மனிதம் என்பது*
இன்னமும் கண்டு
பிடிக்க முடியாதது;
*சிரிப்பு என்பது*
அடுத்தவன்
விழும்போது
வருவது;
🍁🍁🍁🍁🍁🍁🍁🍁🍁🍁
Related News
Popular News
TODAY'S POLL
தேசிய ஓய்வூதிய முறையின் கீழ் கிடைக்கும் 'வரி சலுகைகள்' ஒருங்கிணைந்த ஓய்வூதிய திட்டத்திற்கும் பொருந்தும். இது ஒருங்கிணைந்த ஓய்வூதியத் திட்டத்தைத் தேர்வுசெய்ய ஊழியர்களை ஊக்குவிக்குமா?