இன்றைய சூழ்நிலையில் மனிதன்

இன்றைய சூழ்நிலையில் மனிதன்


*வீரம் என்பது*

பயப்படாத மாதிரி

நடிக்கிறது;


*புத்திசாலி என்பது*

அடுத்தவனை

முட்டாளாக்குவது;


*சந்தோஷம் என்பது*

பணம் இருப்பதாய்

காட்டிக் கொள்வது;


*அமைதி என்பது*

அடுத்து என்ன பேசனும்னு

தெரியாமலிருப்பது;


*குற்றம் என்பது*

அடுத்தவர் செய்யும்போது

தெரிவது;


*தன்னிலை விளக்கம் என்பது*

தன் தவறுக்கு சால்ஜாப்பு

சொல்வது;


*பொதுசனம் என்பது*

கூடி நின்று வேடிக்கை

பார்ப்பது;


*தானம் என்பது*

வீட்டில் உள்ள பழையதை

கொடுப்பது;


*பணிவு என்பது*

மரியாதை இருப்பதுபோல்

நடிப்பது;


*காதல் என்பது*

இரண்டு பேரும் சேர்ந்து

பொய் சொல்வது;


*கல்வி என்பது*

காப்பி பேஸ்ட் செய்வது;


*நேர்மை என்பது*

நூறை திருப்பிக் கொடுத்து

இருநூறாய் கேட்பது;


*நல்லவன் என்பது*

கஷ்டப்பட்டு நடிப்பது;


*எதார்த்தம் என்பது*

நெல்லை விற்றுவிட்டு

அரிசி வாங்கிக் கொள்வது;


*மனிதம் என்பது*

இன்னமும் கண்டு

பிடிக்க முடியாதது;


*சிரிப்பு என்பது*

அடுத்தவன் 

விழும்போது

வருவது;


🍁🍁🍁🍁🍁🍁🍁🍁🍁🍁

Related News

Follow US

TODAY'S POLL

vote-image

தேசிய ஓய்வூதிய முறையின் கீழ் கிடைக்கும் 'வரி சலுகைகள்' ஒருங்கிணைந்த ஓய்வூதிய திட்டத்திற்கும் பொருந்தும். இது ஒருங்கிணைந்த ஓய்வூதியத் திட்டத்தைத் தேர்வுசெய்ய ஊழியர்களை ஊக்குவிக்குமா?

50%
50%