ஈரானின் ஆளில்லா விமானம் எல்லை தாண்டி அஜர்பைஜான் நாட்டுக்குள் நுழைந்து தாக்குதல் நடத்தியதாக தகவல் வெளியாகியுள்ளது.
இந்த தாக்குதலில் இருவர் காயமடைந்ததாக அஜர்பைஜான் வெளியுறவு அமைச்சகம் தெரிவித்துள்ளது. இந்த சம்பவம் இரு நாடுகளுக்கிடையேயான பதற்றத்தை அதிகரித்துள்ளது. எல்லைப் பாதுகாப்பு குறித்து அஜர்பைஜான் அரசு தீவிர கவனம் செலுத்தி வருகிறது.
அஜர்பைஜானின் ஒரு விமான நிலையத்தை குறிவைத்து இந்த ஆளில்லா விமானம் தாக்குதல் நடத்தியதாக கூறப்படுகிறது. இதற்கு கடும் எதிர்ப்பு தெரிவித்துள்ள அந்நாட்டு அரசு, இது சர்வதேச விதிமுறைகளுக்கு எதிரான செயல் என கண்டனம் தெரிவித்துள்ளது. இத்தகைய நடவடிக்கைகள் உலகளாவிய பதற்றத்தை மேலும் அதிகரிக்கும் என்றும் எச்சரித்துள்ளது. சம்பவம் குறித்து ஈரான் தெளிவான விளக்கம் அளிக்க வேண்டும் எனவும் கேட்டுக் கொண்டுள்ளது.மேலும் எதிர்காலத்தில் இத்தகைய சம்பவங்கள் மீண்டும் நடைபெறாத வகையில் உடனடி நடவடிக்கைகள் எடுக்கப்பட வேண்டும் என அஜர்பைஜான் வலியுறுத்தியுள்ளது. நாட்டின் பாதுகாப்பை காக்க தேவையான அனைத்து நடவடிக்கைகளையும் எடுக்க உரிமை உள்ளதாகவும் தெரிவித்துள்ளது. இந்த சம்பவம் குறித்து இரு நாடுகளுக்கும் இடையே அரசியல் பரபரப்பு அதிகரித்துள்ளது.
Related News
TODAY'S POLL
தேசிய ஓய்வூதிய முறையின் கீழ் கிடைக்கும் 'வரி சலுகைகள்' ஒருங்கிணைந்த ஓய்வூதிய திட்டத்திற்கும் பொருந்தும். இது ஒருங்கிணைந்த ஓய்வூதியத் திட்டத்தைத் தேர்வுசெய்ய ஊழியர்களை ஊக்குவிக்குமா?