உயர்கல்வியை சீரமைக்க உடனடி நடவடிக்கை தேவை: முதல்வருக்கு பாலகுருசாமி வேண்டுகோள்

உயர்கல்வியை சீரமைக்க உடனடி நடவடிக்கை தேவை: முதல்வருக்கு பாலகுருசாமி வேண்டுகோள்

சென்னை:

முதல்​வர் ஸ்டா​லினுக்​கு, அண்ணா பல்​கலைக்​கழக முன்​னாள் துணை வேந்​தரும், மத்​திய அரசு பணி​யாளர் தேர்​வாணை​யத்​தின் (யுபிஎஸ்​சி) முன்​னாள் உறுப்​பினரு​மான பால​குரு​சாமி அனுப்​பி​யுள்ள மனு​வில் கூறி​யிருப்​ப​தாவது: தமிழக பல்​கலைக்​கழகங்​கள் நெருக்​கடிமிக்க சவால்​களை எதிர்​கொண்டு வரு​கின்​றன. அதற்கு விரைந்து தீர்வு காணா​விட்​டால், உயர்​கல்வி நிறு​வனங்​களின் தரம், தன்​னாட்சி அந்​தஸ்​து, உலகளா​விய போட்​டித் திறன் அனைத்​தும் பாதிக்​கப்​படும்.


தமிழக பல்​கலைக்​கழகங்​களில் தேசிய கல்விக் கொள்​கையை அமல்​படுத்​து​வ​தில் புரிதலும், சரி​யான தெளி​வும் இல்​லை. தேசிய கல்விக் கொள்​கைக்கு மாற்​றாக, அதன் இலக்​கு​களை அடை​யத்​தக்க வகையி​லான மாற்று கல்விக் கொள்​கை​யும் இது​வரை செயல்​படுத்​தப்​பட​வில்​லை.


இந்த விஷ​யத்​தில் கொள்கை முடிவு எடுக்க முடி​யாமல் இருந்​தால், அது மாநில பல்​கலைக்​கழகங்​களில் குழப்​பத்தை உண்டாக்கும். தமிழ கத்​தின் சமூக, பொருளா​தார, மொழி சூழலுக்கு ஏற்ப தேசிய கல்விக் கொள்கை இலக்​கு​களை அடைவதற்கான ஒரு தெளி​வான செயல் திட்​டத்தை உரு​வாக்க வேண்​டியது அவசர, அவசி​யம்.


தமிழகத்​தில் பெரும்​பாலான பல்​கலைக்​கழகங்​களில் துணை வேந்​தர்​கள், நிரந்தர பதி​வாளர்​கள், தேர்வு கட்​டுப்​பாட்டு அலு​வலர்கள், கணக்கு அலு​வலர்​கள் இல்​லை. சரி​யான தலைமை இல்​லா​விட்​டால், பல்​கலைக்​கழகம் சரி​யாக செயல்பட முடி​யாது. பல ஆண்​டு​களாக பணி நியமனம் இல்​லாத​தால், ஆசிரியர் பணி​யிடங்​களும் காலி​யாக உள்​ளன. தற்​காலிக முறை​யில் நியமித்தால், கற்​பித்​தல், ஆராய்ச்சி பணி சரி​யாக இருக்​காது.


இதனால், மாணவர்​கள் பெரிதும் பாதிக்​கப்​படு​வார்​கள். ஆசிரியர்​கள், அலு​வலர்​களுக்கு ஊதி​யம் வழங்க முடி​யாத அளவுக்கு பல்கலைக்​கழகங்​கள் நிதி நெருக்​கடி​யில் சிக்​கி​யுள்​ளன. அரசு அதி​காரி​களின் அளவுக்கு மீறிய தலை​யீடு, பல்​கலைக்​கழக நிர்வாகத்​தை​யும், அதன் தன்​னாட்சி அந்​தஸ்​தை​யும் பாதிக்​கும்.


இன்​றைய கல்​வி, வேலை​வாய்ப்பு சூழலுக்கு ஏற்ப பாடத் திட்​டங்​கள் மாற்றி அமைக்​கப்​பட​வில்​லை. ஆராய்ச்​சி, காப்​புரிமை, சர்​வ​தேச கல்வி நிறு​வனங்​களு​டன் இணைந்து செயல்​படு​வது ஆகிய​வற்​றில் தமிழக பல்​கலைக்​கழகங்​கள் பின்​தங்கி உள்​ளன. இப்​படிப்​பட்ட சூழலில், உயர்​கல்​வியை சீரமைக்க சில யோசனை​களை முன்​வைக்​கிறேன்.


உயர்​கல்​வியை மதிப்​பீடு செய்​ய​வும், சீரமைப்​புக்​கான செயல் திட்​டங்​களை பரிந்​துரைக்​க​வும் மாநில உயர்​கல்வி சீரமைப்பு செயல் குழுவை அமைக்க வேண்​டும். ஆசிரியர் நியமனங்​களில் வெளிப்​படைத் தன்​மை, காலக்​கெடு​வுடன் கூடிய நியமன முறையை அறி​முகம் செய்ய வேண்​டும். பல்​கலைக்​கழகங்​களின் ஆராய்ச்​சி, உள்​கட்​டமைப்பு மேம்​பாடு, தொழில்​நுட்ப வளர்ச்சிக்​கான நிதியை உயர்த்த வேண்​டும்.


தற்​போதைய சூழலுக்கு ஏற்ற பாடத் திட்​டங்​களை உரு​வாக்​கும் வகை​யில், பல்​கலைக்​கழகங்​களும், தொழில் நிறு​வனங்​களு​டன் இணைந்து செயல்பட செய்ய வேண்​டும். எனவே, உயர்​கல்​வி சீரமைப்​புக்​கு உறு​தி​யாக, தைரிய​மாக, விரைந்​து நடவடிக்​கை எடுக்​க வலி​யுறுத்​துகிறேன்​. இவ்​​வாறு அவர்​ தெரிவித்​துள்​ளார்​.


Related News

Follow US

TODAY'S POLL

vote-image

தேசிய ஓய்வூதிய முறையின் கீழ் கிடைக்கும் 'வரி சலுகைகள்' ஒருங்கிணைந்த ஓய்வூதிய திட்டத்திற்கும் பொருந்தும். இது ஒருங்கிணைந்த ஓய்வூதியத் திட்டத்தைத் தேர்வுசெய்ய ஊழியர்களை ஊக்குவிக்குமா?

50%
50%